தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு மாநில இயக்குனராக நியமிக்கப்பட்ட மீரா மிதுன் பதவியில் இருந்து நீக்கம்..! காரணம் இது தானாம்..இதோ பதவி நீக்க அறிக்கை..!!
மாடலிங் உலகில் சூப்பர் மாடலாக கலக்கி வருபவர் நடிகை மீரா மிதுன். திறமை இருந்தாலும் அவரது செயற்பாடுகள் யாருக்கும் பிடிக்காமல் போனதற்கு அவரே காரணமாக இருந்தார். தன்னை தவிர மற்றவர்கள் எல்லோரும் தாழ்ந்தவர்கள் என்பது அவரது எண்ணம்.
மாடல் நடிகை டான்ஸர் என பல அவதாரங்களில் இருந்த மீரா பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று சர்ச்சைகளை ஏற்படுத்தினார். இதில் சேரன் மீது போடப்பட்ட பொய்யா விடயமே அனைவரையும் அதிர வைத்தது. அதன் பின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப் பட்ட மீரா மிதுன் வெளியே வந்தும் விஜய் தொலைக்காட்சி மீது புகார்களை தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் மீரா மிதுனுக்கு தமிழ் நாடு லஞ்ச ஊழல் தடுப்பு மாநில இயக்குனராக பதவி கிடைத்தது. இதனை மீரா மிதுன் பதிவிட்டதுடன் இனி அனைவரையும் வைத்து செய்யப் போகிறேன் என குறிப்பிட்டிருந்தார். பதவி கிடைத்து வெறும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் மீரா மிதுனின் பதவி பறிக்கப்பட்டு விட்டதாக அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.
மீரா மிதுன் மீது FIR உள்ள நிலையில், police clearance certificate சமர்பிக்கும் படி கூறப் பட்டிருந்தது. வழமை போல் மீரா மிதுன் இதிலும் நான் தான் பெரியவள் என்பது போல் கண்டுகொள்ளாமல் இருக்க இவரது பதவி தற்போது பறிக்கப் பட்டு வேறு ஒருவருக்கு கொடுக்கப் பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளானர்..!