” கவினை நான் காதலிக்கிறேன்”. முதல் முறை பிக் பாஸ் கவின் மீதான காதலை கூறிய செம்பருத்தி சீரியல் நடிகை..!! அப்போ லொஸ்லியா..!?
பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களியே அன்றாடம் மக்களிடம் திட்டு வாங்கும் இருவர் என்றால் அது கவின் மற்றும் லொஸ்லியா தான். அவர்கள் என்ன தவறு செய்தார்கள் என தேடினால் அவர்கள் செய்த தவறு “காதல்” இதற்காக தான் இத்தனை திட்டுகளும். ஆனால் நட்பு என்ற ரீதியில் கட்டிப் பிடித்து தூக்குவது, மடியில் இருக்க வைப்பது, சாப்பாடு ஊட்டி விடுவது, போன்றவற்றை இன்னொரு ஜோடி செய்யும் அது தவறே இல்லை.
இதில் என்ன கொடுமை என்றால் பஸ்களிலும், வீதிகளிலும், ஏன் திரையரங்குகளிலும் காதல் என்ற பேரில் நாசமாகிக் கொண்டிருப்போர் கூட கவின் லொஸ்லியாவின் தொட்டு பேசாத காதலுக்கு எதிர்ப்பு. இது இப்படி இருக்க கவினை எதிர்க்கிறவர்கள் மத்தியில் கவினை நேசிக்கிறேன் என பிரபல சீரியலான செம்பருத்தி சீரியல் வில்லி மித்ரா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மித்ரா என்கிற பரதா நாயுடு கொடுத்துள்ள பேட்டியில் பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் சாக்ஷியை காதலித்து கவின் ஏமாற்றினார் என பலரும் கூறுகின்றனர். உண்மையை சொல்லுங்க சாக்ஷியை நீங்கள் காதலித்திருந்தால் அவர் நடந்துகொண்ட முறைக்கு அவருடன் இருந்து இருப்பீர்களா.? கவின் காதலை நேரடியாக சாக்ஷியிடம் சொல்லாவிட்டாலும் அவருக்கு பிடிப்பு இருந்தது,
ஆனால் சில நாட்களிலேயே சாக்ஷியின் உண்மை முகம் தெரிய வர வெளியே போய் பேசலாம் என விலக ஆரம்பித்தார். ஆனால் சாக்ஷி தான் தப்புவதற்காக கவினை முழுவதும் குற்றவாளியாக்கினார். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உடைந்து அழும் போது தோள் ஒன்று வேண்டும். அதனை லொஸ்லியா கவினுக்கு கொடுத்தார். அந்த ஆறுதல் கவினுக்கு தேவைப் பட்டது.
சாக்ஷி வெளியேறிய பின் பாருங்கள் எந்த ஒரு இடத்திலும் லொஸ்லியா கவினை விட்டுக் கொடுக்கவில்லை. சேரன் சார், தர்சன், வனிதா, சாண்டி,மட்டும் இன்றி வீட்டிற்கு வந்த தன் தாயிடமும் அம்மா கவினுடன் பேசு என்று தான் கூறினார். எத்தனை பிரச்சனை வந்தாலும் தன்னை விட்டுக் கொடுக்காத ஒருத்தியை தான் அத்தனை ஆண்களும் விரும்புவார்கள் கவினும் அதில் இருந்து எப்படி விதிவிலக்காக முடியும். ?
அதே போல் கவினும் லொஸ்லியாவை குழந்தை போல் பார்த்துக் கொள்வேன் என சேரன் சாரிடம் சொன்னது இன்றளவும் என் மனதில் பதிந்து விட்டது. நிச்சயம் கவினை மாதிரி ஒரு இளைஞன் தன்னை நேசிப்பவரை குழந்தை போல் பார்த்துக் கொள்வார், பிக் பாஸ் பார்த்ததில் இருந்து கவின் மீது காதல் வந்துவிட்டது. இதனை நான் அடிக்கடி வீட்டில் சொல்லிக் கொண்டே இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்..!!