முகென், சாண்டி, லொஸ்லியா, செரின்,ஆகியோரில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தானாம்..! வெளியாகியுள்ள தகவல்..!!
கடந்த இரண்டு சீசன்களை போலவே இந்த சீசனிலும் மக்கள் ஆதரவை அதிகமாக பெற்றிருந்த போட்டியாளர் வெளியேறினார். சீசன் ஒன்றில் ஓவியா வெற்றி பெற வேண்டும் என மக்கள் விரும்பினார்கள். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரூல்ஸை மீறியதால் ஓவியா வெளியேற்றப் பட்டார்.
அதே போல் மக்களின் அதிக ஆதரவை பெற்று வெற்றி பெறுவார் என இரண்டாவது சீசனின் எதிர் பார்க்கப் பட்டவர் யாஷிகா. அவரும் பைனல் செல்லாமல் வெளியேற்றப் பட்டார். மூன்றாவது சீசனிலும் அதுவே நடந்தது தர்சன் வெளியேற்றப் பட்டார்.
வெளியேற்றங்கள் முடிந்த பின் யார் வெற்றி பெறுவார் என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தது. அதற்கான பதில் தற்போது ஓரளவு வெளியாகிவிட்டது. ஆம் இம்முறை பிக் பாஸ் டைட்டிலை சாண்டி வெற்றி பெறுவார் என கூறப் படுகின்றது. இரண்டாம் இடம் முகெனுக்கும் மூன்றாம் இடம் லொஸ்லியாவிற்கும் நான்காம் இடம் ஷெரினுக்கும் கொடுக்கப் படுகிறதாம்.
ஆரம்பத்தில் இருந்த நிலை முற்றிலும் மாறி தற்போது இது தான் முடிவு என விமர்சனங்கள் கூறி வருகின்றனர். பொதுவாக விஜய் டிவியில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் இலங்கை தமிழர்களை வெற்றியாளராக தேர்வு செய்ததில்லை, இனியும் செய்ய மாட்டார்கள் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு..!