“நான் நயன்தாராவை மட்டும் காதலிக்கவில்லை, பல பெண்களை காதலித்தேன்” நடிகர் சிம்பு அதிரடி.!!
நான் நயன்தாராவை மட்டும் காதலிக்கவில்லை, நடிகர் சிம்புவின் அதிரடி பேச்சால் ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். நடிகர் சிம்பு என்றாலே தீராத விளையாட்டு பிள்ளை தான். ஆரம்பத்தில் நல்ல பிள்ளையாக இருந்த சிம்பு பின் காதல் பித்துப் பிடித்திருந்தார். அதன் போது தான் நடிகை நயன்தாரா சிம்புவின் காதலில் விழுந்தார்.
சில வருடங்கள் கூட காதல் நிலைக்காத நிலையில் பிரிந்தனர். இவர்கள் பிரிந்து பல வருடங்கள் ஆன போதும் இன்னும் இவர்களின் காதல் பேசப் படாமல் இல்லை. நயன் சிம்புவை ஏமாற்றினார், சிம்பு நயன்தாராவை ஏமாற்றினார் என கூறிக்கொண்டே இருக்கின்றனர்.
இந்த நிலையில் அண்மையில் பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிம்புவிடம் நயனுடனான காதல் பிரிவு பற்றி கேட்கப் பட்டது. இதற்கு பதில் அளித்த சிம்பு நயன்தாராவை மட்டுமா நான் காதலித்தேன்.?
அவருக்கு பிறகும் முதலும் பலரை காதலித்தேன், ஏன் அவர்கள் பற்றி நீங்கள் கேட்கவில்லை.? நயன்தாரா மற்றும் என் காதல் எப்போதோ முடிந்து போனது, அதன் பின் பல பெண்கள் என் வாழ்வில் வந்து போனார்கள், நீங்களே அது பற்றி நியூஸாக்கி இருதீர்கள்.இனி நயன் பற்றி பேசாதீர்கள் என கூறியுள்ளார்.!