“சினிமா, தொலைக்காட்சி எதிலும் இல்லை நீ” பிக் பாஸ் வீட்டிற்குள் ஓரம்கட்டப்படும் போட்டியாளர்.! தனியாக சிக்கிக் கொண்ட அப்பாவி.!
பிக் பாஸ் வீட்டில் இன்று எதுவுமே இல்லாத ஒன்றுக்கு நடிகர் சிபி சந்திரன் மற்றும் அபிஷேக் ராஜா இருவரும் நிரூப் உடன் சண்டை போட்டது ரசிகர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் கடந்து வந்த பாதை டாஸ்கில் போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதை பற்றி கூறிக்கொண்டிருக்கின்றனர்.
இதில் இமான் அண்ணாச்சி தான் கடந்து வந்த பாதை பற்றி மிக சோகமான விடயங்களையும் நகைச்சுவையாக கூறினார். இதனால் போட்டியாளர்கள் சிரித்த படியே கேட்டுக் கொண்டிருந்தனர். இதில் ஒரு கட்டத்தில் நிரூப் வாய்விட்டு சிரித்து விட்டார். இதனால் அண்ணாச்சிக்கு எந்த பிரச்சனையும் இல்லாத போது சிபி சந்திரன் கண்டெண்ட் கிரியேட் பண்ண ஆரம்பித்து விட்டார்.
நிரூப் சிரித்தது பிடிக்கவில்லை என்று திட்ட இதையே பிடித்துக் கொண்டு அபிஷேக் ராஜா நிரூப்பை திட்டி தீர்த்துள்ளார். நகைச்சுவையாக தனது வாழ்க்கை பயணத்தை கூறியதால் நிரூப் சிரித்தது தவறில்லை என அண்ணாச்சி கூறிய பின்பும் இதனை ஏற்க மறுக்கும் சிபி தனது நடிப்பை சிறப்பாகவே தொடர்கிறார்.
அது மட்டும் இன்றி 4 பேராக கூட்டணி அமைத்துக்கொள்ளும் இவர்கள் நிரூப் பற்றி பின்னால் பேச ஆரம்பிக்கும் ஆண் போட்டியாளர்கள் சினிமா அல்லது சீரியல் தொடர்பு இல்லாதவர் என்பது போல் பேசுகின்றனர். இவர்கள் பேசுவதற்கு முடிந்த அளவு பதில் சொல்லும் நீருப் ஒரு கட்டத்திற்கு மேல் அந்த இடத்தை விட்டு விலகி சென்று விடுகிறார்.! பிக் பாஸ் வீட்டில் ஆரம்பித்திருக்கும் முதல் பிரச்சனையே ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.!!