நடிகர் பார்த்தீபன் சீதா பிரிவிற்கு உண்மை காரணம் இது தானாம்..! சோகத்தில் ரசிகர்கள்…!!
நடிகர் பார்த்தீபன்” கதை, கவிதை, நடிப்பு,இயக்கம், என தமிழ் சினிமாவில் தூள் கிளப்பியவர். சினிமா, வாழ்க்கை இரண்டையும் சரியாக எடுத்துச் சென்றவர் பார்த்தீபன் என்றால் சரி தான். நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட பார்தீபனுக்கு இரண்டு மகள்கள், சீதா பார்த்தீபனுடனான கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.
சீதா வேறு நடிகருடன் லிவிங் டுகெதர் வாழ்ந்தார். ஆனால் பார்த்தீபனோ மறுமணம் செய்யவில்லை. இரண்டு பெண் குழந்தைகளையும் வளர்த்து நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்தார். பலர் பார்த்தீபனை மறுமணம் செய்துகொள்ள சொல்ல அவரோ மறுத்து விட்டார். தற்போது இது பற்றி பிரபல இணையம் ஒன்று பேட்டி கண்டுள்ளது.
அதில் அனைவருக்கும் எடுத்துக் காட்டாக இருக்கும் நீங்கள் ஏன் மனைவியை பிரிந்தீர்கள் என்ற கேள்விக்கு இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்தது.
இருவரும் பறக்க நினைத்தோம். ஒருவரது சிறகை ஒருவர் உடைப்பது தவறு அதனால் பறந்துவிட்டோம். நான் செய்வதெல்லாம் சரி என்று நான் நினைக்கலாம் ஆனால் அது இன்னொருவருக்கு வருத்தத்தை கொடுக்கும் வந்த வருத்தத்தை நான் சீதாவிற்கு கொடுக்க விரும்பவில்லை.
அவரது வாழ்க்கை அவர் கையில் அதனால் செல்ல விட்டு விட்டேன். இன்றளவும் அவரை பற்றி நானோ என்னை பற்றி அவரோ எந்த குறையும் கூறியதில்லை இது தான் காதல். எங்கள் பிரிவும் காதல் தான். நான் எந்த தவறும் இன்று வரை செய்யவில்லை,
அவரை நோகடிக்க வில்லை, என் மனதில் துளியும் குற்ற உணர்வு இல்லை அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என கூறியுள்ளார். தற்போது மகள்கள் திருமணம் செய்துவிட்டார்கள் அதனால் மறுமணம் செய்து கொள்வீர்களா என கேட்டதற்கு மனம் தான் எல்லாமே பின் ஏன் மறுமணம் என கேட்டுள்ளார். வாழ்த்துக்கள் நிஜத்தில் நீங்கள் ஹீரோ தான்..!!