பிரபல சீரியல் நடிகை பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை என்கிற சித்ரா ஹோட்டல் ரூமில் திடீர் மரணம்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!!
பிரபல விஜேயும் சின்னத்திரை நடிகையுமான சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரபல தொலைகாட்சியில் விஜே யாக அறிமுகமான சித்ரா அதன் பின் நடன நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானானர்.
அதன் பின் சீரியல்களில் நடித்து வந்த சித்ராவை ஒட்டுமொத்த மக்களிடமும் கொண்டுபோய் சேர்த்த சீரியல் என்றால் அதி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் தான். முன்னணி சீரியல் நடிகைகள் நடித்து வரும் இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் சித்ராவிற்காகவே ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருந்தது.
இந்த சீரியலில் சித்ராவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப் பட்டது. 28 வயதாகும் சித்ரா யாரையும் காதலிக்க மாட்டேன் என்றும் பெற்றோர் பேசும் திருமணத்தை தான் செய்வேன் எனவும் கூறி இருந்த நிலையில், கடந்த மாதம் தொழிலதிபர் ஒருவருடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.
சித்ரா நேற்று வரை மகிழ்ச்சியாக இருந்ததுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சூட்டிங்காக ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்துள்ளார். நள்ளிரவு 2.30 மணிக்கு சூட்டிங் முடித்துவிட்டு அறைக்கு சென்ற இவர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினரை அரிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.! தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.!!