பீட்டர் பாலால் பல கோடி ரூபாய்களை இழந்த நடிகை வனிதா.! பணத்துக்காக வனிதாவை பயன்படுத்திக் கொண்ட பீட்டர் பால்.!!
கடந்த சில மாதங்களுக்கு முன் சர்ச்சைகளுக்கு மத்தியில் பீட்டர் பாலை திருமணம் 3வதாக திருமணம் செய்தவர் நடிகை வனிதா. திருமணம் முடிந்ததில் இருந்து பல சர்ச்சைகளை சந்தித்து வந்த வனிதா அனைத்தையும் தாண்டி பீட்டர் பாலுடன் மகிழ்ச்சியாக இருந்தார். அடிக்கடி வீடியோக்கள் வெளியிட்டதுடன் காதலையும் பகிர்ந்துகொண்டனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வனிதா பீட்டர் பால் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. இவற்றை நாமும் பகிர்ந்து இருந்தோம். வனிதா தனது பிரிவு பற்றி ட்விட்டர் பக்கத்திலும் பதிவு செய்திருந்தார். அத்துடன் நேற்றைய தினம் லைவ் வந்த வனிதா நடந்த அனைத்தையும் கூறி இருந்தார்.
ஏற்கனவே குடிபோதைக்கு அடிமையாகி இருந்த பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன் அனைத்தையும் விட்டு நல்லவராக மாறி இருந்தார். ஆனால் திருமணமாகி சில நாட்களில் அவரது அண்ணாவிற்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது, இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பீட்டர் பால் குடிக்கு மறுபடி அடிமையானதுடன் பலரிடம் சென்று கடன் கேட்க ஆரம்பித்துள்ளார்.
அத்துடன் வீட்டிலும் அத்துமீறி நடந்துகொள்வதுடன் எங்கே செல்கிறார் என்ன செய்கிறார் என தெரியாமல் இருந்துள்ளார். பீட்டர் பாலை காதலிக்க ஆரம்பித்த நாளில் இருந்து அவருக்காக தன்னிடம் இருந்த ஒடுமொத்த பணத்தையும் வனிதா வீணாக்கி உள்ளார். அண்மையில் மாரடைப்பு ஏற்பட்டு பீட்டர் பால் மருத்துவ மனையில் இருந்த போது பல லட்சம் ரூபாய் செலவு செய்து அவரை காப்பாற்றியுள்ளார்.
பீட்டர் பாலுக்கான அத்தனை மருத்துவ உதவிகளையும் செய்துள்ளார். அன்பும் அரவனைப்பும் தேவை என்பதற்காக தன்னிடம் இருந்த ஒட்டுமொத்த பணத்தையும் செலவு செய்துள்ளார். தற்போது கையில் பணம் இல்லாத நிலையில் வாழ்வுக்காக் விஜய் தொலைகாட்சி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறாராம், அத்துடன் யூடியூபில் வரும் லாபத்தை வைத்தே தனது அன்றாட வாழ்க்கையை வாழ்வதாக அவரே கூறியுள்ளார். காதல் என்ற பெயரில் அனைத்தையும் இழந்து நிற்பதாக வனிதா தெரிவித்துள்ளார்.!!