ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் “பூவே பூச்சூடவா என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருப்பவர் கிருத்திகா. இந்த சீரியலில் ஹீரோயின் ரேஷ்மாக இருந்த போதும் பலரின் விருப்ப நாயகியாக இருப்பவர் மீனாட்சி என்றழைக்கப் படுகின்ற கிருத்திகா தான். பெரும்பாலும் பூவே பூச்சூடவா சீரியலின் கதை இவரை சுற்றியே ஓடும். குழந்தை தனமான இவரது நடிப்புக்கு பலரும் அடிமை.! ஆனால் இவருக்கு இப்போது 32 வயதாகிறது. இவர் குழந்தை அல்ல இவருக்கு குழந்தை இருக்கிறது. ஜீ தமிழ் சூப்பர் மாம் நிகழ்ச்சியில் அம்மாவும் மகளும் கலந்துகொண்டது நாம் அறிந்தது தான். இந்த நிலையில் லட்டு கிருத்திகா
தனது குழந்தை பற்றிய சில விடயங்களை பகிர்ந்துள்ளார். பலரும் மகள் அபியை ஜூனியர் கிருத்திகா என கூப்பிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் மகளால் நான் பட்ட வலி வேதனை யாரும் அறிய மாட்டீர்கள் என கூறியவர் குறை மாதத்தில் மகள் கிடைத்துவிட்டால். குழந்தை மிகவும் சிறியவள்.
கைகளால் தூக்க முடியாது, அணைக்க முடியாது, முத்தமிட முடியாது, ஏன் தாய்ப்பால் கூட கொடுக்க முடியாது. என் மகளை பேபி ரூமில் வைத்துவிட்டார்கள். மகளின் முகத்தை பார்ப்பதோடு சரி மூன்று மாதங்கள் தொடர்ந்து போராடினானேன். எனக்கு பால் கட்டிக் கொள்ளும்.
செவிலியர்கள் என் பாலை எடுப்பார்கள். வலியால் துடிப்பேன். ஆனால் எனக்கு என் குழந்தை வேண்டும் என்ற உறுதி இருந்தது. இன்று என் மகள் ஆரோக்கியமாக இருக்கிறாள். ஒரு வேளை அன்று என் மகள் இல்லாதிருந்தால் நிச்சயம் நானும் மரணித்திருப்பேன் என கண்ணீர் வடித்தார். தாய்மை என்பது பலம் வாய்ந்தது தன் குழந்தைகளை மரணத்தோடு போராடியும் மீட்டு விடுகிறது.!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”