தாயான பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா.! அவரே வெளியிட்டுள்ள அதிரடி பதிவு இதோ.!!
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா தங்களுக்கு குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகையும் அழகியுமான பிரியங்கா சோப்ரா தன்னை விட வயதில் குறைந்தவரான நிக் ஜோனாஸ் என்பவரை காதலித்து திருமணம் அவருடனேயே வாழ்ந்து வருகின்றார்.
கடந்த மாதம் நிக் மற்றும் பிரியங்கா சோப்ரா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவதாக செய்திகள் வெளியானது. இருவரும் அமைதியாக இருந்த நிலையில் பிரியங்காவின் தாயார் தங்கள் மகள் மகிழ்ச்சியாக வாழ்கிறார் என்றும் அவர்களுக்கிடையில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர்கள் பிரியவில்லை என்றும் கூறி இருந்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் நிக் மற்றும் பிரியங்கா சோப்ரா தங்கள் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில் நாங்கள் தாய் தந்தையாகி உள்ளோம். எங்கள் வீட்டிற்கு வாடகை தாய் மூலம் அழகிய குழந்தை ஒன்று வந்துள்ளது.
இது வரை எங்கள் குடும்பத்தில் இருந்த மகிழ்ச்சி இனி அதிகமாகும் என தெரிவித்துள்ளதுடன் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கை விடயங்களை மீடியாக்கள் தேட வேண்டாம். சில விடயங்கள் எங்கள் தனிப்பட்டவை என தெரிவித்துள்ளார்.இதனை பார்த்த பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் ஏன் பிரியங்கா குழந்தை பெற்றால் அழகு குறைந்து விடும் என பயந்து வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளாரா என கேட்டு வருகின்றனர்.!