பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிரியங்கா முதல் முதல் போட்ட பதிவு.! பிக் பாஸ் வீட்டில் இத்தனை மற்றம் நடந்ததாம். இதோ அவரது பதிவு.!!
பிக் பாஸ் நிக்ழ்ச்சி நிறைவடைந்து போட்டியாளர்கள் அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் தங்கள் பிக் பாஸ் வீட்டின் அனுபவம் பற்றி பகிர்ந்து வருகின்றனர். 105 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த பிரியங்கா இன்றைய தினம் தனது பிக் பாஸ் அனுபவம் பற்றி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் ” எனக்கு வாக்களித்து 105 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்க வைத்த உங்கள் அனைவருக்கும் நன்றி,பிக் பாஸ் வீடு என்பது நாம் யார் என்பதை நமக்கு இலகுவாக காட்டி விடுகிறது, நமக்கு மட்டும் இன்றி நம்மை சுற்றி உள்ளவர்கள், எம்மை ரசித்தவர்கள் என அனைவருக்குமே காட்டிக் கொடுத்து விடுகின்றது.
எப்போதும் மைக்கிற்கு முன்னாள் சிரித்து சிரித்து பேசி கலாய்த்துக் கொண்டிருக்கும் பிரியங்காவை மட்டுமே நீங்கள் பார்த்து இருப்பீர்கள், ஆனால் பிரியங்காவும் சாதாரண பெண் தான், பிரியங்காவிற்கும் கோபம் வரும், அழுகை வரும் என்பதை பிக் பாஸ் வீட்டிற்குள் பார்த்து இருப்பீர்கள்,
105 நாட்கள் உங்கள் முன்னாள் நடிக்காமல் நிஜமான பிரியங்காவாக இருந்தேன் என்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். பிரியங்கா பிக் பாஸ் வீட்டில் அனைவரையும் சமாளித்துச் சென்றதுடன் மிகவும் நிதானமாக விளையாடியே இறுதி வரை வந்தார் என பலரும் பாராட்டி வருகின்றனர்.!