நடிகர் வேணு அரவிந்தின் தற்போதைய நிலை என்ன.? பிரார்த்தனை செய்யுங்கள், நடிகை ராதிகா வெளியிட்ட பதிவு.!!
தலையில் அறுவை சிகிச்சை இடபெற்ற நிலையில் நடிகர் வேணு அரவிந்த் கோமா நிலையில் இருப்பதாக வெளியான அறிக்கையில் உண்மை இல்லை என நடிகை ராதிகா போட்ட பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. பிரபல நடிகர் வேணு ஆனந்த் அவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில் அவரது தலையில் கட்டி இருப்பது உறுதி படுத்தப் பட்டது.
உடனடியாக டாக்டர்கள் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் நீக்கினார்கள், இதனை தொடர்ந்து வேணு அரவிந்த் கோமா நிலைக்கு சென்றுள்ளதாக அனைத்து ஊடங்களிலும் செய்திகள் வெளியானது. டுவிட்டர், இன்ஸ்ட்டாகிராம் பக்கங்களிலும் இந்த தகவல் வைரலானது.
இந்த நிலையில் இன்றைய தினம் இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள ராதிகா வேணு அரவிந்த் ஆபத்தான நிலையில் இருப்பது உண்மை தான். அவரது மனைவியும் நானும் தான் அவரை பாதுக்காப்பாக பார்க்கிறோம், அவர் கோமா நிலைக்கு செல்லவில்லை, கோமா நிலையில் என்பது தவறான செய்தி, வேணு அரவிந்த் குணமடைந்து விடுவார், தயவு செய்து அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள், சீக்கிரம் நலம் பெறுவார் என கூறியுள்ளார்.!
It’s very sad that the media falsely say that #VenuArvind is in a coma, have been closely following his health with his wife, he was not well, now he is stabilised, a wonderful person, please pray he comes home soon ,sound and healthy.Stop wrong news pic.twitter.com/eWgKKCBzBR
— Radikaa Sarathkumar (@realradikaa) July 29, 2021