அப்பாவியான என் கணவரை கொன்றுவிட்டார்கள், மகிழ்ச்சியான குடும்பத்தை சிதைத்து விட்டார்கள், நடிகை ராகவி பேட்டி.!!
ராஜா சின்ன ரோஜா திரைப்படத்தில் ரஜினியின் கையில் தொங்கி விளையாடும் சிறுமியாக நடித்தவர் ராகவி. அதன் பின் சில திரைப்படங்கள் தொடர்ந்து நடித்துவந்த ராகவி சினிமா துறையை சேர்ந்த சசிக்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கேமராமேனாக பணியாற்றிய சசிகுமாரை ராகவி சுமார் 8 வருடங்கள் காதலித்து வந்த நிலையில் ஆரம்பத்தில் இரு குடும்பத்தினரும் மறுத்தனர், ஆனால் இவர்கள் காதலில் உறுதியாக இருந்ததால் சம்மதம் தெரிவித்தனர்.
ராகவி சசிகுமார் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு 13 ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்தனர். திடீரென 2019ம் ஆண்டு சசிகுமார் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகி குடும்பத்தினரை அதிர வைத்தது. சசிக்குமார் மிகப் பெரிய மன அழுத்தத்தில் இருந்ததாக பலரும் கூறினார்கள். சசிகுமாரின் மரணத்திற்கு காரணம் என்ன என்பது குழப்பத்தில் இருந்த போது படக்குழுவினர் மீது ராகவி குற்றம் சுமத்தியுள்ளார்.
2 வருடம் நிறைவடைந்த நிலையில் இது பற்றி கூறியுள்ள ராகவி எங்களுக்கு பணக் கஷ்டம் இருந்தது, இதனால் கடினமாக உழைத்துக் கொண்டிருந்தோம், திடீரென ஒரு நாள் தற்கொலை செய்துகொண்டார்.ஏன் எதுக்கு என்று தெரியாத போது தான் சசிகுமார் மீது திருட்டு பழி போடப்பட்டது தெரிய வந்தது. சசிகுமார் கேமராவை திருடிவிட்டதாக அனைவர் முன்னிலையிலும் அவமானப் படுத்தப் பட்டுள்ளார்.
இதனை தாங்க முடியாத அவர் சில நாட்கள் அமைதியாக இருந்தார். நானும் வேலை டென்சன் என விட்டுவிட்டேன், பேசி இருந்தால் கூட அவரை காப்பாற்றி இருக்கலாம், அப்பாவியான என் கணவர் மீது பொய்யான பழி போட்டு அவரை கொன்று விட்டார்கள். நானும் என் கணவரும் அவர்களை மன்னித்தாலும் கடவுள் அவர்களை மன்னிக்கவே மாட்டார். மகிழ்ச்சியாக இருந்த என் குடும்பத்தை இன்று மண்ணாக்கி விட்டார்கள் என கூறியுள்ளார்!!