பிரபல நடிகை ரம்பாவின் கணவர் கெட்டவரா..!? கலா மாஸ்டர் பேட்டி..!
90களின் பின் இளசுகளின் மனதின் தொடை அழகியாய் ஒரு ரவுண்ட் வந்தவர் நடிகை ரம்பா. சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே இலங்கையில் பிறந்து கனடாவில் தொழிலதிபராக இருக்கும் இந்திரன் என்பவரை திருமணம் செய்து கனடாவில் குடியேறினார்.
இரண்டு குழந்தைகளின் பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து மீண்டும் இணைந்தார்கள். அதன் பின் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. இந்த நிலையில் நடிகை ரம்பாவின் நீண்ட நாள் தோழியான டான்ஸ் மாஸ்டர் கலா அவர்கள் கனடா சென்று ரம்பாவை சந்தித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில்.
நானும் ரம்பாவும் பல திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியதால் நெருக்கமான தோழிகளாக இருந்தோம். ஆனால் அவரது திருமண முறிவு என்னை மிகவும் கவலைபட வைத்தது. இந்திரன் கெட்டவர் என முடிவு எடுத்தேன். ஆனால் ரம்பா எப்போதும் அவர் நல்லவர் என்றே கூறுவார்.
என்ன கூறினாலும் இந்திரன் மீதான கோவம் குறையாமல் இருந்தது. மூன்றாவது குழந்தை கிடைக்க இருக்கும் போது வளைகாப்பு ஏற்பாடு செய்தார்கள். அது எனக்கு ப்றீ நாள் ஒன்றை எனக்காக வைத்தார்கள். அதன் போது நான் ரம்பாவிடம் உனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்றேன்.
அவளை மகிழ்ச்சி படுத்த அன்றைய தினம் என் நடன குழுவினரின் சப்ரைஸ் டான்ஸும் ஏற்பாடு செய்து கொண்டாடினோம். குழந்தை பிறந்த பின் ரம்பாவை சந்திக்க சென்றேன். அதன் போது தான் இந்திரனின் உண்மை முகம் தெரிந்தது. ரம்பாவையும் குழந்தைகளையும் அவர் தாய் போல் தாங்குகிறார்.
இப்படி ஒரு ஆண் தன் மனைவியை கவனிப்பாரா என ஆச்சர்ய பட்டேன். .. ரம்பாவை பிரிந்ததால் அவர்மீது ஏற்பட்ட கோவம் ரம்பாவை கவனிப்பதை பார்த்து மறைந்தே போய்விட்டது என கூறியுள்ளார்…!