ரியோவினால் சோகத்தில் இருக்கும் மனைவி மற்றும் குடும்பத்தினர்.! உண்மையை வெளியிட்ட ரியோவின் நண்பர் பிரிட்டோ.!!
பிக் பாஸ் வீட்டில் குரூபிஸம் ஆரம்பித்தவர் என்று கூறப்படுபவர் தொகுப்பாளர், நடிகர் ரியோ ராஜ். விஜய் தொலைகாட்சியில் தொகுப்பாளராக அறிமுகமான ரியோ அதன் பின் “நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். இதன் பின் சில திரைப்படங்களில் நடித்து வந்த ரியோ பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார்.
ஆரம்ப நாட்களில் கோபம் என்ற பெயரில் அட்டகாசம் செய்த ரியோ ராஜை யாருக்குமே பிடிக்கவில்லை. இதனால் எல்லோரும் ஒதுக்கினார்கள். ஆனால் தற்போது சாதாரணமாக இருக்கிறார். இந்த நிலையில் ரியோ ராஜின் நண்பரான பிரிட்டோ பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ரியோ மட்டும் தான் வீட்டிற்குள் சிறப்பாக விளையாடுகிறார்.
ரியோ உண்மையாக இருக்கிறான். வெளியே எப்படி சிரிக்க வேண்டிய இடத்தில் சிரித்து கோபப் பட வேண்டிய இடத்தில் கோபப் படுவானோ அதை தான் வீட்டிற்குள் செய்கிறான். சுரேஷ் தாத்தா வீட்டிற்குள் இருக்கும் வரை ரியோவை கடுப்பேத்தினார். அதனால் தான் கோபப் பட்டான். இப்போது சுரேஷ் தாத்தா வெளியே சென்றுவிட்டார் அதனால் கோபப் பட ஒன்றும் இல்லை.
அதனால் தான் கோபப் படாமல் இருக்கிறார்.இதனை சிலர் சடர்ஜி என கூறுகின்றனர். ஆனால் இது ரியோவின் நிஜ முகம் என பிரிட்டோ தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரியோவின் மனைவி ஸ்ருதிக்கு சிலர் தேவையில்லாத மெசேஜ்கள் அனுப்புவதாகவும், ரியோவை போல் ஒருத்தரை ஏன் திருமணம் செய்தீர்கள், ?
அவரை விவாகரத்து செய்து விடுங்கள் என்று மெசேஜ் அனுப்புகின்றனர். இது மிகவும் வருத்தமளிக்கிறது. அது மட்டும் இன்றி சிலர் ஸ்ருதி இடும் பதிவுகளில் கேவலமாக கொமெண்ட் செய்வதாகவும் ,இதனால் ரியோவின் குடும்பத்தினர் சோகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.!