பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ரியோ மற்றும் கேப்ரியலா இருவருக்குமான உறவு என்ன தெரியுமா.? இதோ ரியோவின் மனைவி வெளியிட்ட பதிவு.!!
பிக் பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது என்பதை நாம் அறிவோம், யார் யார் உள்ளே இருக்க வேண்டும், யார் வெளியே செல்ல வேண்டும் என்பதை ரசிகர்களே தீர்மானிக்கின்றனர் என அடிக்கடி கமலஹாசன் கூறினாலும் யார் வெளியேற வேண்டும் என்பதை தொலைகாட்சியே தீர்மானிக்கின்றது.
பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தவர்களில் சுரேஷ் சக்கரவர்த்தி, ரேகா, வேல்முருகன், சுசித்ரா ஆகியோர் வெளியேறி உள்ள நிலையில் தொலைகாட்சி நட்சத்திரங்கள் யாரும் வெளியேறவில்லை. குறிப்பாக நிஷா, ரியோ, கேப்ரியலா, ஆஜித், இவர்களுடன் இருக்கும் அர்ச்சனா, சோம், ஆகியோர் தொலைகாட்சியால் காப்பாற்றப் படுகின்றனர்.
மற்றைய போட்டியாளர்கள் வெளியேற்றப் படுகின்றனர். குறிப்பாக ரியோவை நாமினேட் பண்ணாதவர்கள் என்றே சொல்ல வேண்டும். அர்ச்சனா, நிஷா, கேப்ரியலா, சோம் ஆகியோர் எந்த தயக்கமும் இன்றி ரியோவின் கையில் டைட்டிலை கொடுக்க கூடியவர்கள். தொலைகாட்சிக்கும் ரியோவே வெற்றிபெற வேண்டும்.
அதனால் ரியோவை நல்லவராக்க தொலைகாட்சி முயற்சி செய்து வருகிறது. ஆனால் தொலைகாட்சியிடம் ஏமாற ரசிகர்கள் தயாராக இல்லை, அதனால் ரியோவை கிழித்து தொங்கவிட்டுக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் ரியோவின் மனைவியான ஸ்ருதி சில புகைப்படங்களை வெளியிட்டு கணவரின் புகழ் பாடி வருகிறார். அதில் நேற்றைய தினம் கேப்ரியலா மற்றும் ரியோ அழகிய அண்ணன் தங்கை என பதிவிட்டுள்ளார்.
கேப்ரியலா ரியோவை தூக்கிவிடுவார், அல்லது ரசிகர்கள் கிசுகிசுப்பார்களோ என்ற பயத்தில் ஸ்ருதி இப்படி கூறிவிட்டதாக ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.