சத்யா சீரியல் ஆயிஷாவிற்கு நிஜ வாழ்வில் ஒரு திருமணம் இரண்டு காதலா.!? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் ஆயிஷா..இதோ..!
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சத்யா சீரியலில் நடித்து வருபவர் ஆயிஷா. ஜீன்ஸ் சேர்ட், ஹேர் கட் என டாம் போயாக நடிக்கும் இவரை பற்றி அண்மை காலங்களில் கிசுகிசுக்கப் பட்டுக் கொண்டிருகின்றது.
சத்யா பொன்மகள் வந்தால் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இயக்குனருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் சீரியலை விட்டு வெளியேறினார். அதன் பின் தெலுங்கு சீரியலில் கதாநாயகி யாக நடித்து வரும் இவர் சத்யா சீரியலிலும் விஷ்ணுவுடன் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சத்யா சீரியல் ஆயிஷா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்று என்னை காதலித்தார். என்னை காதலித்துக் கொண்டிருக்கும் போதே விஷ்ணுவுடன் காதலில் விழுந்து அவருடனும் நெருக்கமாக இருகிறார் என ஆயிஷாவின் முன்னாள் காதல் சர்ச்சையாக்கினார்.
இது தொடர்பாக ஆயிஷாவிடம் கேட்ட போது… அட என்னங்க எனக்கு ஒரு முறை கூட திருமணம் ஆகவே இல்லிங்க…என்கிறார். காதல் இருந்திச்சி ரொம்ப நம்பி காதலிச்சேன். ஆனா அந்த காதல் உண்மை இல்லை. அதனால் பிரிந்து வந்திட்டேன்.
இப்ப காதல் எல்லாம் இல்லை. நான் யார்கூட நடிச்சாலும் அந்த ஹீரோவ காதலிக்கிறேன் சொல்றாங்க..தெலுங்கு சீரியல் ஹீரோவையும் சொல்றாங்க இப்ப விஷ்ணுவ சொல்றாங்க இவங்க இருவரும் என் நண்பர்கள் மட்டும் தான். சூட்டிங் ல இருக்கும் வரை கலாய்ப்போம் அப்போ எடுத்த போட்டோவ போட்டு தான் காதலிகிறதா சொல்றாங்க…
ஆனால் சூட்டிங் விட்டு வெளிய வந்தா போன் பண்ணி கூட பேசிக்க மாட்டோம். என் வளர்ச்சி பிடிக்கல அதான் இப்படி செய்றாங்க சரி நல்லா இருக்கட்டும் என சிரிக்கிறார் ஆயிஷா.! உன் நல்ல மனசுக்கு நீயும் நல்லா இருமா.!