இதில் என்ன கேவலம்.? நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு பதிலடி கொடுத்த செந்தில் ராஜலட்சுமி ..!
நாட்டுப் புற கலைஞர்கள் பாரம்பரிய கலாச்சார முறைகளை பின்பற்ற வேண்டும்.ஆனால் இவர்கள் இரட்டை அர்த்த வார்த்தைகள் பேசுவது, அடுத்தவர் மனைவியிடம் தேவையற்ற முறையில் பேசுவது மாடர்ன் உடை அணிவது என நாட்டுப் புற இசையை கெடுக்கிறார்கள் இது கேவலமான விடயம் என
கடந்த வாரம் நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் மக்கள் இசை கலைஞர் செந்தில் அவர்களை தாக்கி பேசி இருந்தார்கள். இது பற்றி மக்கள் இசை கலைஞர் செந்தில் கருத்து தெரிவித்த போது ஆபாசம் என்பது திரை துறைக்குள் இல்லாமல் இல்லை.
பாடல் எழுதும் பலரும் ஆபாச வரிகளை புகுத்திவிடுகின்றனர். யார் தான் பாடாமல் இருக்கிறார்கள் என கேள்வி எழுப்பியதோடு நாங்கள் முடிந்த அளவு ஆபாச வார்த்தைகளை தவிர்த்து வருகிறோம்.
அத்துடன் அந்த வார்த்தைகளுக்கு பதில் வேறு வார்த்தைகளை பயன்படுத்துகிறோம். இதில் தவறு இல்லை. நாங்கள் மக்கள் இசை கலைஞர்கள் எங்கள் கலாச்சாரம் மீது எங்களுக்கும் அக்கறை உண்டு என கூறிப்பிட்டுள்ளார்..!