இலங்கை இளைஞருடன் காதலர் தினம் கொண்டாடிய “நெஞ்சம் மறப்பதில்லை” நடிகை சரண்யா.! இவர் தான் கணவராம்..! வைரலாகும் புகைப்படம் இதோ..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களை மனதை கவர்ந்த சீரியல்களில் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் நடிகர் பார்கவ் அவர்களுக்கு ஜோடியாக அறிமுகமாகி மக்களை கவர்ந்தவர் நடிகை சரண்யா. முதல் சீரியலே சூப்பரான வரவேற்பு பெற்றதால் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஆயுத எழுத்து சீரியலில் சரண்யா நடித்து வருகிறார். இந்த சீரியலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் பெப்ரவரி 14ம் திகதி லண்டன் பறந்துள்ளார் சரண்யா. ஏன் என தேடி பார்த்த போது தான் தெரிய வந்துள்ளது.
சரண்யா 2015ம் ஆண்டு இலங்கையை சேர்ந்த அமுதன் என்ற நபரை திருமணம் செய்துள்ளார். லண்டனில் வசித்து வரும் அமுதன் மனைவியின் ஆசையை நிறைவேற்ற சென்னையில் வீடு எடுத்து கொடுத்ததுடன் விடுமுறைக்கு சென்னை வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதே போல் மனைவி சரண்யாவும் விடுமுறை கிடைக்கும் போது லண்டன் பறந்து விடுகிறார். காதலர் தினத்திற்கு லண்டன் சென்றுள்ள சரண்யா கணவருடன் காதலர் தினம் கொண்டாடி உள்ளார்..!!