செம்பருத்தி சீரியல் பார்வதிக்கு அவரது காதலன் ஆர்யன் கொடுத்த முதல் பரிசு.! வைரலாகும் புகைப்படம்.!!
பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை சபானா. இந்த சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த சபானாவை ரசிகர்கள் கொண்டாடினார்கள். கார்த்திக் மற்றும் சபானா ஜோடியின் அசத்தலான நடிப்பால் சீரியல் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்தது.
சீரியலை விட்டு கார்த்திக் வெளியேறிய பின் சீரியலில் சறுக்கல் நிலை இருந்தாலும் தற்போதும் வெற்றி சீரியலாகவே ஓடிக்கொண்டிருக்கின்றது. ஆரம்பத்தில் கார்த்திக் சபானா காதலிப்பதாக கூறப்பட்டது, ஆனால் கார்த்திக் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதாலும் கார்த்திக்கை சபானா அண்ணா என்று கூப்பிடுவதாலும் பெரிதாகாமல் இல்லாமல் போனது.
பின் சபானா மற்றும் பாக்கியலக்ஷ்மி சீரியல் நடிகர் ஆர்யன் இருவரும் காதலித்து வருவது தெரியவந்தது. இந்த நிலையில் சபானா ஆர்யனுக்கு சூப்பரான கிப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். இதனை வைத்து ஆர்யன் புகைப்படம் பதிவேற்றியுள்ளார்..இது ஒரு பக்கம் இருக்க ஆர்யனிடம் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது என கேட்க செம்பருத்தி என்றும், சபானாவிடம் ஆர்யன் பற்றி கேட்டதற்கு Mine என்றும் தங்கள் காதலை வெளிப்படுத்தி வருகின்றனர்.!!