நல்ல குடும்பத்தை பிரிந்து விட்டேன், தடுப்பூசி போட்டுக்கொண்ட ஷிவாங்கி போட்ட பதிவு.!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் ஷிவாங்கி. இந்த நிகழ்ச்சியில் இவருக்கு பெரிய வரவேற்பு இல்லாத நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஷிவாங்கியின் குழந்தை தனத்தை ரசித்த ரசிகர்கள் தங்கள் வீட்டு பெண்ணாக கொண்டாட தொடங்கினார்கள்.
இதனால் மக்கள் மத்தியில் வைரலானார் ஷிவாங்கி. கடந்த வாரம் பதிவொன்றை போட்ட ஷிவாங்கி குக் வித் கோமாளி என்கிற அழகிய குடும்பத்தை பிரிந்து இருப்பதாக கூறி இருந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளார் ஷிவாங்கி.
இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட ஷிவாங்கி தடுப்பூசி எடுத்துக் கொண்ட போது கொஞ்சம் வலித்தது, ஆனால் அதை விட கொரோனா மிக மோசமானதாகும். ஒரு நிமிட வலிக்காக உயிரை விட முடியாது. தயவு செய்து நீங்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். தடுப்பூசி மட்டுமே உயிரை காப்பாற்றும். கொரோனாவில் இருந்து உங்களை கைப்பற்றிக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.!!
Heavy missing https://t.co/wLh40aDI8n
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) June 1, 2021