நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் கொலையா.? தற்கொலையா.? வெளியான மருத்துவ அறிக்கை…!!
நேற்றைய தினம் தற்கொலை செய்துகொண்ட சுஷாந்த் சிங்கின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிவந்த நிலையில் பிரேத பரிசோதனையின் பின் சுஷாந்த் சிங்கின் மருத்துவ அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. அரச மருத்துவர்களால் பொலீஸாரிடம் கொடுக்கப் பட்ட குறித்த மருத்துவ அறிக்கையில் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது உறுதிபடுத்தப் பட்டுள்ளது.
தூக்கிட்டுக் கொண்டதால் ஏற்பட்ட மூச்சுத் திணறலே சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு காரணம் என மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. சுஷாந்த் சிங்கின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மாமா குறிப்பிட்டுள்ள நிலையிலேயே இந்த அறிக்கை வெளியிடப் பட்டது.
இதனை தொடர்ந்து சுஷாந்த் சிங்கின் அலுவலகத்தில் இருந்து ம் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அதில் சுஷாந்த் சிங் மீதான உங்கள் அன்புக்கு நன்றி. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அவரின் ஆன்மா சாந்திக்காக பிரார்த்திக்கிறீர்கள், அத்துடன் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளீர்கள் அனைவருக்கும் நன்றி. அதே போல் மீடியா நண்பர்களுக்கும் நன்றி.
அத்துடன் சுஷாந்த் சிங் தற்போது மரணித்து விட்டார், அவரை பற்றி அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தவறான செய்திகளை பரப்பாதீர்கள். எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது..!