மரணத்தின் பின் மிகப் பெரிய சாதனை செய்த நடிகர் சுஷாந்த்..! கண்ணீருடன் பகிரும் ரசிகர்கள்..!!
கடந்த மாதம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டார். ஹிந்தி சீரியலின் மூலம் தொலைகாட்சிக்கு அறிமுகமான இவர் பின் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவரது சினிமா வாழ்க்கையை உலக அளவிற்கு கொண்டு சென்ற திரைப்படம் இந்திய அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தான்.
ஹிந்தி சினிமா ரசிகர்கள் மட்டும் இன்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் இந்த திரைப்படத்தையும் சுஷாந்த் சிங்கையும் கொண்டாடினார்கள். ஆனால் சாதாரணமாக வந்த ஒருவர் திடீரென முன்னேறினால் பலருக்கு பிடிக்காதே..அதனால் சுஷாந்தின் வளர்ச்சியை சிலர் தடுக்க ஆரம்பித்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த நிலையில் ரஹ்மானின் இசையில் சுஷாந்த் சிங் நடித்த Dil Bechara திரைப்படம் இவரது மரணத்தின் பின் வெளியானது. இதன் டீசர் ட்ரைலர் என அனைத்தும் பல சாதனைகள் செய்திருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் இன்னுமொரு சாதனை செய்துள்ளது.
இந்த திரைப்படம் ஹாட் ஸ்டாரில் பிரிமியர் செய்யப் பட்டது. இந்த திரைப்படம் வெளியாகி சுமார் 24 மணி நேரத்திற்குள் 95 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை இதுவரை எந்த ஒரு திரைப்படமும் செய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது…!!