” சோம் சேகர் பிக் பாஸ் வீட்டிற்குள் பொய்யான முகத்துடன் தான் இருந்தார்” தேன்மொழி சீரியல் நாயகனும் சோம் சேகரின் நெருங்கிய நண்பருமான சித்தார்த் பேட்டி.!!
அமைதியாக இருந்து பைனல் வந்தவர் என்றால் அது சோம் சேகர் தான். எந்த பிரச்சனைக்கும் போக மாட்டார், தனக்கு கொடுக்கப் பட்ட வேலையை மட்டும் பார்த்துவிட்டு தன் பாட்டில் இருந்து விடுவார். இதனால் ரசிகர்களின் ஆதரவை இழந்தார். முதல் சில வாரங்களில் வெளியேறிவிடுவார் என எதிர்பார்க்கப் பட்டபோதும் டிக்கெட் 2 பினாலே டாஸ்கின் மூலம் வெற்றிப் பெற்று பைனல் வரை வந்தார்.
இருப்பினும் பைனலில் முதல் ஆளாக வெளியேற்றப் பட்டார். இந்த நிலையில் சோம் பற்றி அவரது நெருங்கிய நண்பரான தேன்மொழி சீரியல் ஹீரோ சித்தார்த் பேட்டி அளித்துள்ளார். அதில் பிக் பாஸ் வீட்டில் இருந்தது நிஜ சோம் இல்லை என்று தான் சொல்லுவோம், காரணம் எப்போதும் துடிதுடிப்பாக இருப்பான், எதற்கும் சோர்ந்து இருக்க மாட்டான்,
சரி என்றால் சரி, தவறு என்றால் தவறு அது தன் அவன் குணம். ஆனால் பிக் பாஸ் வீட்டில் சோம் எங்கே என்று தேடினோம், அந்த அளவிற்கு காணாமல் போய் இருந்தான் அல்லது காணாமல் ஆக்கப்பட்டிருந்தான், எது எப்படி போனாலும் வீட்டிற்குள் அவன் அவனாக இருக்கவில்லை,
அப்படி இருந்து இருந்தால் அவனே டைட்டில் வின்னராக வந்திருக்கலாம், அனைவருக்கும் சோம் காட்டிய அன்பு தான் அவனுக்கு வெற்றியை கொடுக்கவில்லை, சோம் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை என்ச் கூறியதுடன் பைனல் வரை வந்தது மகிழ்ச்சி என கூறியுள்ளார்.!!