“என் நெஞ்சு அடைத்துவிட்டது, இதைவிட சோகம் என் வாழ்வில் இனி வராது” நடிகை ஸ்ரீபிரியா போட்ட பதிவு.! ஆறுதல் கூறும் ரசிகர்கள்.!!
தமிழகத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற தேர்தலின் முடிவுகள் அண்மையில் வெளியாகின. மக்கள் விரும்பியபடியே தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கு மறைவுக்கு பின் மக்களால் தேர்ந்தெடுக்கப் படாத முதலமைச்சர்கள் ஆட்சி செய்த நிலையில் இம்முறை தேர்தலில் மக்கள் தங்கள் முதலமைச்சராக திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களின் மகனுமான மு.க. ஸ்டாலின் அவர்களை தேர்வு செய்தனர்.
கடந்த சில வருடங்கள் நடந்த கசப்பான சம்பவங்களால் மக்கள் உடைந்து போய் உள்ள நிலையில் மக்கள் இந்த ஆட்சியில் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பிரபலங்கள் பலரும் இந்த ஆட்சியில் மிகப் பெரிய மாற்றத்தை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நடிகையும் மக்கள் நீதி மய்ய வேட்பாளருமான நடிகை ஸ்ரீபிரியா கொடுத்துள்ள பேட்டியில் முதலில் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
என தெரிவித்ததுடன் இம்முறை வெற்றி பெற்றவர்களை விட தோல்வியடைந்த கமலஹாசன் சார் அவர்கள் பற்றி பலரும் பேசுகின்றனர். எப்படி அவர் தோல்வியடைந்தார் என்ற கேள்வி மக்களிடம் போல் எங்களிடமும் உள்ளது. நான் வாழ் நாளில் பல தோல்விகளை பார்த்தவள், எனக்கு இந்த தோல்வி பெரிதல்ல, ஆனால் கமலஹாசன் சார் அவர்களின் தோல்வி எங்களால் நம்ப முடியவில்லை.
அவர் தோல்வியடைவார் என்று நினைக்கவில்லை. அவர் தோல்வி அடைந்து விட்டார் என்றதும் என் நெஞ்சு அடைத்தது போல் இருந்தது. எப்படி இது நடந்தது. ?மக்கள் இலவசத்தை நம்பி நல்ல ஒருவரை இழந்துவிட்டனர். இலவசங்கள் எப்போதும் நிலைக்காது என்பது மக்களுக்கு இன்னும் சில நாட்களில் தெரிய வரும். என் வாழ் நாளின் மிகப் பெரிய சோகம் என்பது இது தான் என தெரிவித்துள்ளார்.!!