பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சுசித்ரா முதல் முதல் பதிவிட்ட பதிவு.! யாருக்கு தெரியுமா.? இதோ.!!
பிக் பாஸ் வீட்டில் இருந்து சுசித்ரா வெளியேற்றப் பட்டதில் இருந்து சுசிக்கு ஆதரவாக ரசிகர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய சுசி வீட்டிற்குள் இருக்கும் குருப்பிஸம் பற்றி கூறிச் சென்றார்.
வெளியே இருந்து பார்ப்பதை போல் இல்லை வீட்டிற்குள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் என கூறினார். வீட்டிற்குள் இருக்கும் வரை சுசித்ராவை திட்டி தீர்த்த ரசிகர்கள் வெளியேறிய பின் அற்புதமான பாடகி, நல்ல பெயருடன் வெளியே சென்று விட்டார்.
இன்னும் வீட்டிற்குள் இருந்தால் இருக்கும் பெயரும் கெட்டுவிடும் என தற்போது ஆதரவாக பேச ஆரம்பித்துள்ளனர். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்ற சுசித்ரா தோழிகளிடம் தற்போது மன அமைதி முக்கியமாகிறது.
சில நாட்களுக்கு கோயில்களுக்கு செல்லப் போகிறேன், இது தான் சரியான வழி என கூறியுள்ளதுடன், சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் “சிறந்த துணை நீயே கணேஷா” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.!!