மர்ம பிரதேஷங்களில் காயங்கள் மற்றும் கீறல்கள், சுஷாந்தின் முன்னாள் மேனேஜர் திஷாவின் மரணத்தில் திடீர் திருப்பங்கள்..!!
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தற்கொலை செய்துகொண்ட சுஷாந்த் மரணத்தில் மர்மங்கள் இருந்து வரும் நிலையில் தற்போது வழக்கு சூடுபிடித்து வருகிறது. அனைவரின் பார்வையும் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தி மீது உள்ளது.
சுஷாந்தின் தற்கொலைக்கு முக்கிய காரணம் அவராக இருப்பார் என்ற சந்தேகம் மற்றும் புகார்களின் அடிப்படையில் ரியா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் சுஷாந்த் சிங்கின் முன்னாள் மெனேஜர் திஷாவின் தற்கொலை தொடர்பில் பல விடயங்கள் வெளியாகி உள்ளது.
சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொள்வதற்கு 7 நாட்களுக்கு முன்பு 9வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது ஆரம்பத்தில் தற்கொலை என கூறப்பட்ட போதும் திஷாவின் தந்தை தனது மகளின் மரணம் தற்கொலை அல்ல திட்டமிட்ட கொலை என கூறியுள்ளார்.
தனது மகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப் பட்டிருக்கலாம் என கூறப்பட்டதை தொடர்ந்து விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் திஷாவின் மரண பரிசோதனை ரிப்போர்ட் வந்துள்ளது, இதில் திஷாவின் மர்ம பிரதேசங்களில் காயம் இருந்ததாகவும், அத்துடன் பல இடங்களில் கீறல்கள் காணப்பட்டதாகவும் கூறிப்பிடப் பட்டுள்ளது.
இந்த நிலையில் திஷாவின் தந்தையின் புகாரில் உண்மை இருக்கலாம் என் நம்பப் படுகிறது …சுஷாந்தின் மரணத்திற்கும் ரிஷாவின் மரணத்திற்கும் தொடர்பு இல்லை என கூறப்பட்ட போதும் சில நேரம் இருக்கலாம் என கூறப்பட்டு வருகிறது.!!