“நான் தற்போது மலிவானவ ள் இல்லை” நடிகை டாப்ஸி மற்றும் கங்கனா இடையே மோதல்.! டாப்ஸிக்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள்.!!
நான் தற்போது மலிவானவள் இல்லை, நானும் விலை மதிப்பானவள் ஆகிவிட்டேன் என நடிகை “டாப்ஸி” டுவிட்டர் பக்கத்தில் கிண்டலாக பதிவு செய்த டுவிட் நடிகை கங்கணாவை சீண்டியுள்ளது. நடிகை டாப்ஸி டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில் அவருக்கு எதிரான செயற்பாடுகள் அதிகரிக்க தொடங்கியது.
இதில் ஒரு பகுதியாக நேற்றைக்கு முன் தினம் அனுராக் காஷ்யப், மற்றும் டாப்ஸி ஆகியோரின் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்தப் பட்டது. கணக்கில் வராத சொத்துகள் உள்ளதாக தெரிவிக்கப் பட்டது. இதனை தொடர்ந்து நடிகை டாப்ஸி என் வீட்டிலும் வருமான வரி சோதனை நடந்து விட்டது, இதனால் நான் மலிவானவள் இல்லை என்பதை சிலர் புரிந்துகொள்வார்கள் என தெரிவித்திருந்தார்.
இதற்கான காரணம் நடிகை கங்கனாவின் தங்கை சில மாதங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி ஒன்றில் டாப்ஸி பற்றி பேசாதீர்கள் அவர் நடிகைகள் மத்தியில் மிகவும் மலிவானவர் என குறிப்பிட்டு இருந்ததே. அதற்கு கிண்டலாக டாப்ஸி இதனை பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த கங்கணா என்ன தான் சொன்னாலும் நீங்கள் மலிவானவர் தான், அதனால் தான் கணக்கில் வராத பணம் உங்களிடம் உள்ளது.
இப்போது சரி புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன் எங்கு என்ன பேசவேண்டும் என்பதை என கூறிப்பிட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் டாப்ஸி பேசியது விவசாயத்திற்கு ஆதரவாக தானே அப்படியானால் விவசாயத்திற்கு ஆதரவு கொடுப்பவர்கள் எல்லோருக்கும் இந்த நிலை தானா என திட்டி தீர்த்து வருகின்றனர்.!!