மீண்டும் தர்சனுடன் ஒட்டிக் கொண்ட செரின்..! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தர்சனுக்கும். நடிகை சனம் ஷெட்டிக்கும் இடையில் இருந்த காதல் கதை அண்மையில் வைரலானது. பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் போது சிங்கிள் என கூறி வந்த தர்சன் தனக்கு வெளியே க்ரஸ் இருப்பதாக கூறினார். காதல் என்றோ நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்றோ தர்சன் கூறவில்லை. வெளியே வந்த பின் கூட இது பற்றி தர்சன் வாய் திறக்கவில்லை.
ஆனால் அண்மையில் தர்சன் சனம் செட்டியிடம் பணம் வாங்கி ஏமாற்றியது மட்டும் இன்றி நிச்சயதார்த்தம் முடிந்தது வரை அனைத்தையும் ஆதாரத்துடன் நிரூபித்தார் சனம் ஷெட்டி. இதனால் வேறு வழி இன்றி சனம் ஷெட்டி மீது பொய்யான குற்றச் சாட்டுகளை முன் வைத்தார் தர்சன்.
இவை எதுவும் சரிவரவில்லை. அதனால் தற்போது அமைதியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் சனம் ஷெட்டி பிரிந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறாராம் நடிகை செரின். தர்சனுக்கு தற்போது தேவையான உதவிகளை செய்து வருவதுடன் தர்சனுடன் ஒட்டிக் கொள்ள தொடங்கி விட்டாராம்.
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே தர்சனை ஒருதலையாக காதலித்து வந்த செரின் தான் இவர்களின் பிரிவிக்கு காரணம் என ரசிகர்கள் கூறி வரும் நிலையில் செரின் தர்சனுடன் ஒட்டிக் கொண்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது…!!