சீரியல் அல்லது திரைப்ப நடிக நடிகைகள் என்றால் சர்ச்சையில் சிக்குவது காதல் அல்லது அடி தடி விடயங்களில் தான். ஆனால் அண்மையில் அருகம்பாக்கத்தில் உள்ள ஒரு செல்போன் கடையில் திருடிய சம்பவம் வைரலாகியுள்ளது.
விலை உயர்ந்த செல்போன்களை பெண் ஒருவருடன் வந்த இளைஞர் திருடுவதை சிசிடிவி காட்சியில் கண்ட கடை ஊழியர்கள் இருவரையும் பிடித்து பொலீஸாரிடம் கொடுத்துள்ளனர் பொலீஸார்.
பொலீஸாரின் விசாரணையில் குறித்த நபர் சீரியல் துணை நடிகர் தீபக் என்கிற ஆருன் என்றும் பெண் அவரது மனைவி என்றும் இவர்கள பல செல்போன் கடைகளில் திருடி உள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இருவரையும் கைது செய்த பொலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.!