நிச்சயதார்த்தம் முடிந்து திருமண தேதி குறித்த பின் நின்று போன நடிகை திரிஷாவின் திருமணம்.! உண்மையான காரணம் இது தானாம்.!!
20 வருடங்களை கடந்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக மட்டுமே நடித்து வருபவர் நடிகை திரிஷா. இவருடன் சினிமாவிற்கு அறிமுகமானவர்கள் மட்டும் இன்றி திரிஷாவிற்கு பின் சினிமாவிற்கு வந்தவர்கள் கூட சினிமாவை விட்டு சென்றுவிட்டனர். பல நடிகைகள் வாய்ப்புகள் இன்றி தவித்து வரும் நிலையில் அசால்ட்டாக சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார் திரிஷா.
30 வயதை கடந்த பின்பும் அழகிய தேவதையாக ஜொலிக்கும் திரிஷாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் மிக பிரமாண்டமான முறையில் முடிந்து திருமண தேதியும் குறிக்கப் பட்ட பின்னர் திரிஷாவின் திருமணம் நின்று போனது..திருமண முறிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்ட போதும் உண்மை தெரியாத நிலையில் பலர் இருந்தனர்.
இந்த நிலையில் அண்மையில் பிரபல தொலைக்காட்சிக்கு நடிகை திரிஷா பேட்டி அளித்திருந்தார்.அதில் திருமணம் நின்று போனது பற்றி பேசிய திரிஷா ” நான் சினிமாவை மிகவும் நேசிக்கிறேன், சினிமாவிற்கு பின்பு தான் அனைத்தும், இதனை ஆரம்பத்தில் நானும் எனது குடும்பமும் கூறிவிட்டோம்.
முதலில் வருண் சம்மதித்த போதும் திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு சினிமாவில் நடிக்க தடை விதித்து விட்டர். திருமணமா சினிமாவா என்று பார்த்த போது சினிமா தான் முக்கியமாக பட்டது, அதனால் திருமணத்தை நிறுத்தி விட்டோம், தற்போது நிம்மதியாக இருக்கிறேன், என்னை மட்டும் அல்ல சினிமாவையும் ஏற்றுக்கொள்ளும் நபரையே திருமணம் செய்வேன் என கூறியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அட பரவாயில்லையே திரிஷாவும் 90s கிட்ஸ் போல் சிங்கிள் தான் என கூறி வருகின்றனர்.!