சமையலறைக் கழிவுகளைத் தோட்டத்திற்கு இப்படியெல்லாம் பயன்படுத்துங்க!
உங்கள் வீட்டில் சமையலயைில் பயன்படுத்திய கழிவுப் பொருட்களை தூக்கி வீசிவிடுகின்றீர்களா? அதனைப் பயனுள்ள வழிகளிலே பயன்படுத்தலாமே. ஆம் தோட்டம் வைத்துப் பராமரிப்பது என்பது ஒரு மகிழ்வான கலையே. சின்ன சின்ன மரக்கறி வகைகள் கீரை வகைகளைத் தோட்டத்தில் பயிரிட்டால் சமையலிற்ம் உதவியாக இருக்கும்.
அதேவேளை சமையறைப் பொருட்களைக் கொண்டும் தோட்டத்திற்குத் தேவையான உரங்கள் மற்றும் ஏனைய பயன்பாடுகளிற்குப் பயன்படுத்தலாம். அந்த வகையில் சில சமையலறைக் கழிவுகளை பயனுள்ள வகையில் தோட்டத்தில் எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
சமையல் கழிவுநீர்
நாம் சமையலில் பயன்படுத்தி மீதியான மரக்கிக் கழிவு நீரை தோட்டத்தில் பயன்படுத்தலாம். காய்கறி வேக வைத்த மற்றும் பிற சமையல் வேலைகளுக்கு பின் கிடைக்கும் நீரை வீணாக்காமல் அதைச் செடிகளுக்குப் பயனபடுத்தலாம். ஏனெனில் அவற்றில் பல சத்துக்கள் உள்ளன. வேக வைத்த நீரின் சூடு ஆறிய பின்னர் செடிகளுக்கு ஊற்றலாம். இது மிகவும் பயனுள்ள ஒரு செயலாக அமையும்.
மரக்கறிகளின் தோலை உரமாக்குங்கள்.
நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களின் தோல் கழிவுகள் போன்றவற்றையே சிறந்த உரமாகப் பயன்படுத்தலாம். வெங்காயம், உருளைக்கிழங்கின் தோல்கள், பயன்படுத்த முடியாத தக்காளி, இலைக் கழிவுகள் போன்றவற்றை குப்பையில் கொட்டுகிறோம். இதை வீணாக்காமல் வீட்டின் பின்புறம் குழி தோண்டி, அதில் கழிவுகளைக் கொட்டி சிறிது மண்ணைத் தூவினால், உரக்குழி தயார்.
முட்டை ஓடுகள்
முட்டை ஓடுகளில் கல்சியம் சத்துக்கள் அதிகம் காணப்படுகி்ன்றன. இவை உங்கள் தோட்டத்தைச் செழுமையாக்கப் பயன்படும். உலர வைக்கப்பட்ட முட்டை ஓடுகள் ஒரு நல்ல உரமாகச் செயற்படும். அவற்றைக் குப்பையில் தூக்கி எறியாமல் நொறுக்கி மண்ணில் கலந்துவிடுங்கள்.
தேயிலைச் சாயம்.
இதேபோல, பயன்படுத்தப்பட்ட டீத் தூள் கூட சிறந்த இயற்கை உரம் தயாரிக்க பயன்படுகின்றன. மாடி வீட்டில் வசிப்போர் உடைந்த மண் சட்டி அல்லது பக்கெட்டில் மண்ணை இட்டு இந்த இயற்கை உரம் தயாரிக்கலாம்.