குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட பாடகர் உன்னி கிருஷ்ணன். ! இது உத்தராவா என வியந்து போன ரசிகர்கள்.!!
“என்னவளே அடி என்னவளே” பாடலின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் உன்னிகிருஷ்ணன். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 400க்கு மேற்பட்ட பாடல்களை பாடி தனக்கான தனி இடம் ஒன்றை தக்கவைத்துக் கொண்டார். தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் உன்னி கிருஷ்ணன் போட்டியாளர்களுக்கு மிகவும் பிடித்த நடுவராகவும் இருக்கிறார்.
உன்னி கிருஷ்ணனின் மகளான உத்தரா உன்னி கிருஷ்ணனும் பாடகி என்பது நான் நாம் அறிந்தது தான். உத்தராவின் குரலுக்கு அடிமையாகாத யாருமே இல்லை என்று சொல்லலாம். இந்த நிலையில் நீண்ட நாட்களாக உத்தராவை யாரும் காணவில்லை, தேடிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தங்கள் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் உன்னி கிருஷ்ணன்.
இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு வளர்ந்து விட்டரா உத்தரா என கேட்டு வருகின்றனர்.!!