” வடிவேலு ஒரு கேவலமான நடிகர் , என்னை கொடுமை படுத்தினார் ” காமெடி நடிகர் பெஞ்சமின் பேட்டி..!!
“வடிவேலு” சில காமெடி நடிகர்கள் நடித்தால் தான் ரசிகர்கள் சிரிப்பார்கள், ஆனால் திரையில் வடிவேல் என்ற பெயர் தோன்றினாலே சிரிப்பு வந்துவிடும் அந்த அளவிற்கு சிறந்த காமெடி நடிகர். ஆனால் அவரது செயற்பாடுகள் மற்றவர்களை கஷ்ட படுத்துவது போல் தான் இருக்கும். இவரால் பலர் கஷ்டபட்டுள்ளனர். அண்மையில் இயக்குனர் சங்கர் உட்பட பலர் வடிவேல் மீது புகார் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் வெற்றிக் கொடி கட்டு திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகர் பஞ்மின் வடிவேலை போல் ஒரு மோசமான நடிகரை இது வரை நான் சந்தித்ததில்லை. வெற்றிக் கொடி கட்டு திரைப்படத்தில் வடிவேலுவிற்கு நான் திட்டுவது போல் நடிக்க வேண்டும். ஆரம்பத்தில் பல நாட்கள் அவர் சூட்டிங் வரவில்லை சேரன் சார் அவர்கள் வடிவேலு வந்தால் தான் எனது காட்சிகள் எடுக்க முடியும் என கூறியதால் பல நாட்கள் படபிடிப்பு தளத்தில் சும்மா போய் இருந்தேன்.
அதன் பின் வடிவேலு வந்தார் அவருக்கு என்னை பிடிக்கவில்லை. மற்றும் அவரை திட்டுவதும் பிடிக்கவில்லை, புதுமுக நடிகர் நீ என்னை திட்டுவியா என கேட்டுக் கொண்டே இருந்தார். என்னால் நடிக்க முடியவில்லை. சிறிய காட்சிக்கு பல டேக்குகள் வாங்க வைத்தார். ஒவ்வொரு முறை நான் நடிக்க நிற்கும் போதும் முறைத்து பார்ப்பதோடு நடிக்க விடாமல் கிண்டல் செய்தார்.
நீண்ட போராட்டத்தின் பின் வடிவேல் சாரின் காட்சிகள் வேறயாகவும் எனது காட்சிகள் வேறயாகவும் எடுக்கப் பட்டது. வடிவேலுவை பொறுத்த வரையில் எந்த காமெடி நடிகரும் அவரை விட அதிகம் நடிக்க கூடாது. அப்படி நடித்தால் அதனை கெடுத்துவிடுவார் என தெரிவித்துள்ளார்.!!