3வது திருமணம் முடிந்து 1 மாதம் நிறைவடைந்த நிலையில் வனிதாவை மகிழ்ச்சி படுத்திய விடயம்..! கொண்டாடும் வனிதா…!!
வனிதா பீட்டர் பால் திருமணம் முடிந்து நேற்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் சர்ச்சைகளை சந்தித்து தற்போது அதில் இருந்து மீண்டு வருகிறார். வனிதாவின் திருமணம் முடிந்த பின் பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் தனது கணவர் விவாகரத்து செய்யாமல் வேறு திருமணம் செய்துகொண்டதாக பொலீஸில் புகார் கொடுத்திருந்தார்.
ஆனால் 5 வருடங்கள் மனைவியை முழுமையாக பிரிந்து இருந்தது, மற்றும் திருமணம் செய்வதற்கு முன் சட்ட ரீதியான அனைத்தையும் செய்து முடித்துவிட்டு அதன் பின்னரே திருமண பந்தத்தில் இணைந்தனர். இதனால் சட்ட ரீதியாக எந்த ஒரு தண்டனையும் கொடுக்க முடியவில்லை.
இதனை ஒரு சிலர் தங்களை பிரபலமாக்கிக் கொள்ள பயன்படுத்தினார்கள்.அஅதில் ஒருவர் சூர்யா தேவி என்ற பெண். வனிதாவை தவறாக பேசி மிரட்டியதால் கைது செய்யப் பட்டு பின் ஜாமினில் வெளியே வந்தார். இந்த நிலையில் சூர்யா தேவிக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது உறுதி படுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து மீம்ஸ் கிரியேட்டர்ஸ் வைத்து விளையாடி வருகின்றனர். இதனை பார்த்த வனிதா இவற்றை பார்க்கும் போது சிரிக்க கூடாது. ஆனால் என் சிரிப்பை அடக்க முடியவில்லை. என தெரிவித்துள்ளதுடன் கொரோனா வைரஸ் என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.!!
Lol cant stop laughing though I shouldn't.. but corona has been so kind to me..made me find my soul mate, made my channel a huge success ..so I guess corona loves me too https://t.co/vn2tSiazN1
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) July 26, 2020