நேற்றைய தினம் பிக் பாஸ் வீட்டிற்குள் பொலீஸ் நுழைந்ததை அனைவரும் அறிவோம். பெற்ற பிள்ளையை கடத்திய வழக்கில் வனிதாவின் குழந்தையிடம் நேற்று வாக்குமூலம் பெறப் பட்டது. இது குறித்து வனிதாவின் கணவர் வனிதா ஆடுவது நாடகம் என கூறியுள்ளார். 2007ம் ஆண்டு ஆனந்த ராஜன் என்பவரை 2வது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் 2010ம் ஆண்டு தனது 2வது கணவரை விவாகரத்து செய்த வனிதா உன் குழந்தையை நீயே வைத்துக் கொள், என்னால் உனக்கு இனி எந்த தொல்லையும் வராது, உன் வாழ்க்கையில் நான் வர மாட்டேன் என எழுதிகொடுத்துவிட்டு பிரிந்தார். அதன் பின் குழந்தை தந்தையிடம் வளர்த்து வந்தார். திடீரென குழந்தையை வனிதா கடத்திவிட்டார்.
இந்த வழக்கு தற்போது பேசப் படும் நிலையில் வனிதா தொடர்பான பல விடயங்களை கணவர் வெளிப்படுத்தியுள்ளார்.தாய்மைக்கான எந்த தகுதியும் இல்லாத வனிதாவின் முதல் கணவர் ஆகாசின் மகன் விஜய் ஸ்ரீஹரி தனது தாத்தாவான விஜயகுமாருடன் வளர்கிறார். ஆகாஷின் இரண்டாவது குழந்தை மட்டுமே வனிதாவிடம் இருந்தது. மூன்றாவது குழந்தையையும் இரண்டாவது கணவரிடம் விட்டு லிவிங் டுகெதர் வாழ்ந்துவந்த வனிதா குழந்தையை கடத்தியது பாசத்திற்காக இல்லையாம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் தாய் என்பதையும் தனது பிள்ளையை தன்னுடன் வைத்திருப்பதாக தம்பட்டம் அடித்து பிரபலமாவதற்கும் தானாம். வனிதா பிக் பாஸ் வீட்டில் ஆடுவது முழுவதும் நாடகம், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஏமாற்றும் செயல் தானாம்.
4 மாதங்களாக பொலீஸாருடன் சென்னை வந்து சென்றுள்ள ஆனந்த ராஜன் வனிதா அப்போது தலைமறைவாக இருந்ததாக கூறுகிறார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது அவரிடம் விசாரணைகள் இடம் பெறுகிறது. அவருக்கு தெரியும் பிக் பாஸ் நிகழ்ச்சி சென்றால் பொலீஸ் வரும் எப்படியும் அதனை வைத்து நிகழ்ச்சியும் பிரபலமாகும் வனிதாவும் பிரபலமாவார்..இது தான் குறித்த டிவி மற்றும் வனிதாவின் திட்டம் என கூறியுள்ளார்..!! இதோ அவரது வீடியோ..!