வனிதாவின் காட்டில் விடாது பெய்யும் அதிர்ஷ்ட மழை.!! அடுத்தது என்ன அதிர்ஷ்டம் தெரியுமா இதோ..!!
பிரபல நட்சத்திர குடும்பத்தின் வரிசாக இருந்தாலும் சர்ச்சைக்கு முதலிடம் கொடுத்து இருப்பவர் நடிகை வனிதா. கடந்த சில வருடங்களாக வனிதாவின் வாழ்வில் ஏகப்பட்ட பிரச்சனைகள், சர்ச்சைகள், இவைகளில் இருந்து வனிதா தற்போது மீண்டு விட்டார்.
யார் என்ன சொன்னாலும் தனக்கு சரி என்று பட்ட வழியில் சென்று கொண்டிருக்கின்றார். வனிதாவின் இரண்டு பெண் பிள்ளைகளும் தற்போது பெரியவர்கள் ஆகி விட்டதால் இனி ஒவ்வொரு விடயத்திலும் கவனமாக கால் வைக்கப் போவதாக வனிதா தெரிவித்திருந்தார்..
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றப் பட்டதும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் கலக்கப் போவது யாரு, நிகழ்ச்சியில் நடுவரானார், பின் சந்திரலேகா சிரியலிலும் நடித்தார். தற்போது திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இது இப்படி இருக்க வனிதாவிற்கு மீண்டும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
நடிகை அம்பிகா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சீரியலில் சிறப்பான தோற்றத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த சீரியல் ஷூட்டிங்கின் போது எடுக்கப் பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது..!!