” எங்கள் மரணத்திற்கு நீங்கள் தான் காரணம் ” கண்ணீருடன் அதிரடி முடிவெடுத்த வனிதா..!
வனிதாவின் திருமண சர்ச்சை முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது , ஒரு சிலர் வனிதாவிற்கு ஆதரவாக பேசினாலும் பலர் எதிராகவே இருக்கின்றனர். வனிதாவின் முதல் கணவர் ஆகாஷ் வனிதாவின் பிரிவின் பின் மகனுக்காக திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதுடன் ஆன்மீக பக்கத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார். இரண்டாவது கணவரும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
இந்த நிலையில் வனிதா மூன்றாவது திருமணம் செய்துகொண்டார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாத பலன் வனிதாவை திட்டி தீர்க்க ஆரம்பித்தனர். தற்போது வரை வனிதாவை திட்டி தீர்க்கின்றனர். பலருக்கு பதில் சொல்லியும் பலருக்கு திட்டியும் பலரை கடந்து சென்றும் சமாளித்தார்,
ஆனால் தற்போது கடந்து செல்வது கடினமாகி உள்ளது என அவர் தெரிவித்துள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. என்னை மட்டும் இன்றி என் பெண் பிள்ளைகளையும் இழுத்து திட்டுகின்றனர். என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள் , என் குழந்தைகள் நான் செய்த தவறை செய்ய மாட்டார்கள்.
விடவும் மாட்டேன். தொடர்ந்து இது போல் திட்டினால் எங்கள் குடும்பத்தின் சாவுக்கு நீங்கள் தான் காரணம். கொலைகாரர் ஆகிவிடுவீர்கள் என தெரிவித்துள்ளார். எப்போதும் அதிரடியாக இருக்கும் வனிதா இப்படி அழுது பேட்டி கொடுத்தது ரசிகர்களுக்கு வியப்பு தான்..!!