வனிதா வீட்டில் திடீரென இடம்பெற்ற விஷேசம்.! கணவருடன் கழுத்தில் மாலையுடன் லக்சுமியாக நின்ற வனிதா..!
நட்சத்திர குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தற்போது ரசிகர்களால் அதிக கேலி கிண்டலுக்கு ஆளானவர் நடிகை வனிதா விஜயகுமார். வனிதாவின் தொடர் திருமணங்களால் சர்ச்சைக்கு மேல் சர்ச்சைகளை சந்தித்தார். இறுதியாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்ட வனிதா தற்போது அவருடன் வாழ்ந்து வருகிறார்.
அண்மையில் பீட்டர் பாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டார். இதனை வைத்து வனிதாவை பலர் கிண்டல் செய்த போது கணவருக்காக எதை வேண்டுமாலும் செய்வேன் கூறினார். இதனை தொடர்ந்து பீட்டர் பால் நலமடைந்து வீடு சென்ற நிலையில் தற்போது வனிதா வீட்டில் இடம்பெற்ற விஷேட நிகழ்வு ஒன்று பற்றிய செய்திகள் வைரலாகி வருகிறது.
நேற்றைக்கு முன் தினம் லக்சுமி குபேரன் விழா கொண்டாடப் பட்டுள்ளது. இதன் போது லக்சுமியாக வனிதாவும், குபேரனாக பீட்டர் பாலும் இருக்க வனிதாவின் குழந்தைகள் வழிப்பட்டுள்ளனர். இருவருக்கும் பண மாலை அணிவிக்கப் பட்ட புகைப்படங்களை வனிதா இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
அத்துடன் வீட்டில் இடம்பெற்ற லக்சுமி குபேரன் பூஜை இனிதாக இடம்பெற்றது, இந்த வருடத்தை வாழ் நாளில் என்னால் எப்போதும் மறக்க முடியாது என தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மறுபடியும் வனிதாவை கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்…!!