நடிகர் விஷாலை கண்டால் புது நடிகைகள் பயந்து போகின்றனர், பிரபல நடிகை விஷால் மீது குற்றச்சாட்டு.!
நடிகர் விஷாலை கண்டால் நடிக நடிகைகள் பயந்து ஓடுவதாக நடிகை காயத்திரி ரகுராம் கூறியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பல் PSBB பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட விடயம் பலரது விமர்சனத்திற்குள்ளான நிலையில் ஆசிரியர் ராம்கோபால் கைது செய்யப் பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய நடிகர் விஷால் இப்படியானவர்களுக்கு மிகவும் மோசமான தண்டனை வழங்க வேண்டும், இவர்களை மீண்டும் வேலையில் இணைக்க கூடாது. மனம் பதறிப் போகிறது, பள்ளி செல்லும் வயது என்பது குழந்தை வயது, அவர்களுக்கு இப்படி நடந்ததை நினைத்து மனம் பதறுகிறது என கூறி இருந்தார். இதனை பார்த்த காயத்ரி, சிரிப்பு வருகிறது.
உங்களை விட கேவலமான ஒருவர் இந்த தமிழ் சினிமாவில் இல்லை. இங்கு நடிக்க வரும் அத்தனை ஹீரோயின்களும் உங்களிடம் இருந்து விலகிச் செல்கின்றனர். நீங்கள் தான் மிக மோசமானவர். ஆசிரியர் பற்றி பேசும் முன் உங்களை பற்றி யோசியுங்கள், நீங்களே பல நடிகைகளின் வளர்ச்சியையும், வாழ்க்கையையும் கெடுத்து விட்டு நீங்களே பேசுகின்றீர்கள் என திட்டி தீர்த்து பதிவிட்டுள்ளார்.
பாஜகவில் இருக்கும் காயத்திரி ரகுராம் இப்படி பேசுவது வழமையானதாக இருந்தாலும் விஷால் மீது இவர் வைத்துள்ள குற்றச் சாட்டுகள் பள்ளிக்கு ஆதரவாக காயத்திரி செயற்படுவதாக பலரும் கூறி வருகின்றனர்.!?