“காத்திரு நானும் உன்னிடம் வருகின்றேன், நீ எனக்கு வேண்டும்”! நடிகை யாஷிகா போட்ட உருக்கமான பதிவு.! ஆறுதல் கூறும் ரசிகர்கள்.!
உன்னை சந்திக்க நான் வரப் போகின்றேன்,நீ இல்லாமல் வாழ்வது கடினமாக உள்ளது, குற்ற உணர்வாக உள்ளது என நடிகை யாஷிகா பதிவிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் நடிகை யாஷிகா தனது பிறந்த நாளை முன்னிட்டு தோழிகளுக்கு பார்ட்டி கொடுத்த நிலையில் பார்ட்டி முடிந்து வரும் போது ஏற்பட்ட கார் விபத்தில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
யாஷிகா மற்றும் நண்பர்கள் காயங்களுடன் தப்பினார்கள். இதில் யாஷிகாவிற்கு 4 சத்திர சிகிச்சைகள் செய்யப்பட்டது. 6 மாதங்கள் படுக்கையில் இருக்கும் படி டாக்டர்கள் கூறிய நிலையில் தற்போது ஓய்வு எடுத்து வருகின்றார். இந்த நிலையில் அண்மையில் யாஷிகா போட்ட பதிவு அவரது மன நிலையை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது.
குறித்த பதிவில் யார் என்ன ஆறுதல் சொன்னாலும் என் மனம் கேட்குதே இல்லை, உன்னோடு இருந்த அந்த தருணங்கள் நினைவில் வரும் போது வேதனையை தருகின்றது. உன் பிரிவை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை, எனக்கு உன்னிடம் ஓடி வந்துவிட தோன்றுகிறது. நானும் சீக்கிரம் வருகின்றேன் ஒன்றாக வாழலாம்..
இது வரை செய்த தவறுகளை செய்யாமல் மகிழ்ச்சியாக வாழலாம் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பீல் பண்ணாதீர்க்ள் யாஷிகா என கூறி வருகின்றனர்.!!