“பிரபல காமெடி நடிகர் யோகி பாபு என்னை ஏமாற்றிவிட்டார், அவரால் பணத்தையும் இழந்துவிட்டேன்” நடிகர் யோகி பாபு மீது பரபரப்பு குற்றச் சாட்டு..!!
யோகி பாபு ஏமாத்திவிட்டதாக தயாரிப்பாளர் முகமது அலி குற்றம் சுமத்தியுள்ள விடயம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் தெளலத் என்ற திரைப்படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிப்பது போல் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. இதனை உடனடியாக மறுத்த யோகி பாபு தெளலத் திரைப்படத்தில் ஹீரோவாக நடிப்பது இயக்குனர் சக்தி சிவன் என்றும் அவரே அந்த திரைப்படத்தை இயக்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் தெளலத் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் மட்டுமே தான் நடித்திருப்பதாகவும் யோகி பாபு கூறி இருந்தார். இந்த நிலையில் குறித்த திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளரான முகமது அலி என்பவர் யோகி பாபுவால் தான் ஏமாற்றப் பட்டதாகவும் பணம் மற்றும் நேரத்தையும் வீணடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
11 மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப் பட்ட தெளலத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் யோகி பாபு நடிக்க ஒப்பந்தம் செய்யப் பட்டதாகும், வில்லனும் ஹீரோவும் யோகிபாபுவால் சந்திப்பது போல் குறித்த காட்சி அமைந்ததாகவும் தெரிவித்த முகமது அலி, ஆரம்பத்தில் காட்சிகளை நடித்துக் கொடுத்த யோகி பாபு டப்பிங் பேச வரவே இல்லை.
அவர் பிரபலமானதால் பலமுறை கேட்டும் எங்களுக்கு நேரம் ஒதுக்கவில்லை. வருக்காக இத்தனை மாதங்கள் திரைப்படம் வெளியிட முடியாமல் போய் விட்டது. வருவதாக கூறுவார் பின் வர மாட்டார். இதனால் ஏராளமான பணத்தை இழந்தேன். ஒவ்வொரு முறையும் ஏதாவது சாட்டு சொல்லி ஏமாற்றி விடுவார். இதனால் மன உளைச்சலில் இருந்தேன். தற்போது தான் டப்பிங் பேசி தந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.!