பிக் பாஸ் ஓவியாவின் காலை சுற்றி தன்னை தானே விழுங்கும் பாம்பு..! வீடியோவை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்..!!
எத்தனை பிக் பாஸ் சீசன்கள் வந்தாலும் மறக்க முடியாத ஒருவர் என்றால் நடிகை ஓவியா தான். சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்துகொண்ட ஓவியா மற்றவர்களுக்காக வாழாமல் தனக்கு பிடித்த மாதிரி வாழ்ந்தார். எதையும் வெளிப்படையாக பேசிய ஓவியாவை பிக் பாஸ் வீட்டிற்குள் ஒருவருக்கும் பிடிக்காமல் போக வெளியே இருந்த ரசிகர்களோ ஓவியாவை கொண்டாடினார்கள்.
ஒவ்வொரு முறை நாமினேஷனில் வரும் போதும் முதல் காப்பாற்ற பட்டவராக ஒவியாவே இருந்தார். பிக் பாஸ் வீட்டில் ஓவியாவிற்கு ஆதரவாக இருந்த ஆரவ் மீது காதல் வர காதலை வெளிப்படையாக கூறினார், ஆரவ் ஓவியாவின் காதலை நிராகரித்தார். இதனால் தற்கொலை முயற்சி செய்தார்.
இதனால் வெளியேறினார், வெளியே வந்த ஓவியா தனது வேலைகளில் பிஸியாக இருந்தார். ஆரவ் வந்த பின் மீண்டும் டேட்டிங் என்று திரிந்தார். மீண்டும் காதலா என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் ஆரவ் ராஹே என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
இதனால் ஓவியா சோகத்தில் இருந்தார். தற்போது ஆரவை சாடும் விதமாக தனது கால்களில் டாட்டூ ஒன்றை வரைந்துள்ளார். அதில் பாம்பு ஒன்றை தன்னை தானே விழுங்குவது போல் உள்ளது. ஆரவ் ராஹி திருமணத்திற்கு ஓவியா செல்லாத நிலையில் மனிதர்கள் ஏமாற்றுக் காரர்கள் என குறிப்பிட்டிருந்தது குறிப்பிட தக்கது..!!
My little monster ? pic.twitter.com/kDEE2uoUHR
— Oviyaa (@OviyaaSweetz) September 21, 2020