லா(லொ)ஸ்லியாவின் சுயரூபத்தினை அறிந்து கண்ணீர் வடிக்கும் பிக்பாஸ் பிரபலம்?
”சேரப்பா” சேரப்பா.. இப்படி ஒன்றுக்கு நூறு தடவை அன்பாக அழைத்து, அப்பா ஸ்தானத்தில் இயக்குனர் சேரனையும், தன் மகள் போன்றவள் “லா(லொ)ஸ்லியா என்று சேரனும் கடந்த 50 நாட்களும் பிக் பாஸ் வீட்டில் கூறி வந்தார்கள். வனிதாவின் மீள் வருகையினைத் தொடர்ந்து இந்த உறவு முறை அனைத்தும் தலை கீழாக மாறி விட்டதே என்று கூறலாம்.
அல்லது, வனிதாவின் வரவினைத் தொடர்ந்து “பசுத் தோல் போர்த்திய புலியாக” இது நாள் வரை இருந்தார் என கூறப்பட்ட லொஸ்லியாவின் சுய ரூபம் வெளிவர ஆரம்பித்திருக்கின்றது. இன்றைய 54வது நாள் தொடரில், ஷெரினிடம் சேரன் அவர்கள் தன் மனக் கவலைகளைக் கூறுகின்றார். “தொண்டைக்குள்ள வந்து நிக்கிறது” என்கிறார் சேரன், அதற்கு, என்னன்னு ஷெரின் கேட்க, கடந்த 4-5 நாட்களாக ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அப்பா – மகள் , என் பொண்ணு போல நெனைச்சு பழகினேன். ஆனால் அவள் அப்படி இல்லைன்னு சொல்லி தன் கவலையினைக் கொட்டுகிறார் சேரன்.
இப்படீன்னு தெரிஞ்சிருந்தா, ஒரு கேம் ஷோ மாதிரியே பழகி இருக்கலாம். இப்ப நெனைச்சான் தான் ரொம்ப கவலையாக இருக்கிறது என்கிறார் சேரன். இந்த எபிசோட்டைப் பார்க்கும் நெட்டிசன்கள் பலரும், “இவ்ளோ நாளா சொல்லியிருந்தோம், லா(லொ)ஸ்லியாவின் சுயரூபம் வெளியே தெரியும்னு, இன்னைக்குத் தான் சேரனுக்கே தெரிஞ்சிருக்கும் என்று கலாய்க்கிறார்கள். இது தொடர்பாக உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்க ப்ரண்ட்ஸ்
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.