இங்கிலாந்து ஈரானின் எண்ணெய் கப்பலை விடுவித்தது…!!!
கடந்த மாதம் 4 ஆம் திகதி ஈரான் நாட்டின் கிரேஸ்-1 என்ற எண்ணெய் கப்பல் ஐரோப்பிய கூட்டமைப்பின் பொருளாதார தடையை மீறி, சிரியா நாட்டுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுவதாக கூறி, அந்த கப்பலை இங்கிலாந்து சிறை பிடித்துள்ளது.
இந்த கப்பலில் 28 பேர் இருந்தனர். அனைவரையும் கப்பலிலேயே சிறை வைத்துள்ளனர். தங்கள் கப்பல் சிரியாவுக்கு செல்லவில்லை என்று ஈரானும், கப்பல் ஊழியர்களும் மறுத்து பார்த்தனர். ஆனால், இங்கிலாந்து ஜிப்ரால்டர் அதிகாரிகள் கேட்கவில்லை. இந்நிலையில், தற்போது குறித்த கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கப்பலை விடுவிக்க வேண்டாம் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்து இங்கிலாந்து ஜிபாரால்டர் பொலிஸார் ஈரானின் கப்பலை விடுவித்தது. இதனை தொடர்ந்து இருப்பினும், வளைகுடா பகுதியில் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறைபிடித்துள்ளது.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.