விடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப் பட்ட 2022ம் ஆண்டு.! பாபா வாங்கே எழுதிய அதிர்ச்சி தரும் தகவல்.! 2022ம் ஆண்டு மக்களுக்கு இப்படி தான் அமையுமாம்.!
பிறக்கப் போகும் 2022ம் ஆண்டு இது வரை பட்ட அனைத்து கஷ்டங்களுக்கும் தீர்வாகும் என பலரும் எதிர்பார்த்திருக்கும் நிலையில் 2022ம் ஆண்டும் மிகப் பெரிய அழிவை சந்திக்கும்,மக்கள் செத்து மடிவார்கள் என பாபா வாங்கே ஏற்கனவே எழுதி வைத்திருப்பது உலக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாபா வாங்கே ஏற்கனவே எழுதி வைத்த பல விடயங்கள் நடந்து விட்டதால் இதற்கும் மக்கள் பயப்பட ஆரம்பித்துள்ளனர். பாபா வாங்கே அவர்களின் நிஜ பெயர் வெங்கலியா பாண்டேவ சுர்சேவா.
பல்கேரியாவை சேர்ந்த வெங்கலியா பாண்டேவ சுர்சேவா 1911ம் ஆண்டு பிறந்து, 1996ம் ஆண்டு இறந்தார் என கூறப்படுகிறது,
இவருக்கு இரண்டு கண்களுமே தெரியாது என கூறப்படுகின்றது. பாபா வாங்கே தனது 12 வயதில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த போது கடுமையான புயல் மழை அடித்துள்ளது, அதன் போது மின்னல் தாக்கி தனது கண்களின் பார்வையை இழந்துள்ளார். அதன் பின் அதிக தேடல் தொடங்கிய இவர் 5079ம் ஆண்டு இந்த உலகம் அழியும் என எழுதியுள்ளதுடன் 5079 ஆண்டு வரை ஒவ்வொரு வருடமும் நடக்கும் விடயங்களை எழுதியுள்ளார்.
கடந்த வருடம் இவர் எழுதிய அனைத்தும் நடந்த நிலையில் இந்த வருடம் பற்றி எழுதியுள்ளார். அதில் இந்த வருடம் இயற்கை அனர்த்தம் அதிகரிக்கும் எனவும், சுமாமி போன்ற ஆபத்துகளும் ஏற்படும் எனவும் எழுதியுள்ளார். வெப்பம் காரணமாக புது வகை வைரஸ் அதிகமாகும் எனவும் இந்த வைரஸ் ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடுகளை பாதிக்கும் என்றும் எழுதியுள்ளார், இதனை பார்த்த பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.!