லேசான தலைவலி, திடீரென ஒரு பக்க உடல் செயலிழப்பு, 34 வயது பெண்ணின் மரணத்தால் துடிக்கும் குழந்தைகள்.!!
ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி எடுத்துக் கொண்ட இரண்டு குழந்தைகளின் தாயான 34 வயது பெண் ஒருவர் இறந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..பிரித்தானியாவை சேர்ந்த ஆல்பா என்ற பெண் மார்ச் மாதம் ஆஸ்ட்ரா செனிகா முதல் டோஸ் எடுத்துள்ளார். எடுத்துக் கொண்டதில் இருந்து சுமார் ஒரு வாரமாக அவருக்கு தலைவலி இருந்துள்ளது. சாதாரண தலைவலி என நினைத்த ஆல்பா அதனை கவனிக்காமல் விட்டுள்ளார்.
ஆனால் திடீரென அவரது உடலில் ஒரு பகுதி இயங்காமல் போய் உள்ளது. அதிர்ந்து போன குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு மருத்துவ சிகிச்சை செய்த குழுவினரின் முதல் கட்ட பரிசோதனையில் தடுப்பூசியினால் ஏற்பட்ட பிரச்சனை என்பதை கண்டறிந்ததுடன் உடனடியாக நரம்பியல் சிகிச்சைக்கான மருத்துவமனையில் அனுமதித்தனர்..
அங்கு நடந்த பரிசோதனையில் ஆல்பாவிற்கு தடுப்பூசியினால் ஏற்பட்ட ஒருவித பாதிப்பு காரணமாக மூளையில் இரத்தம் உறைந்ததால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது, தொடர்ந்து சிகிச்சை இடம்பெற்ற போதும் சிகிச்சை பலனின்றி ஆல்பா உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான விசாரணையில் குறித்த கால பகுதியில் பிரித்தானியாவில் இதே பிரச்சனையால் சுமார் 200 பேர் பாதிக்கப் பட்டதாகவும் இதில் 50 பேர் தற்போது வரை இறந்துள்ளதாகவும் அறிக்கை வெளியாகி உள்ளது. ஆல்பாவின் மரணமானது அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.!!