இன்றைய ராசி பலன் – 13.09.2021
இன்றைய பஞ்சாங்கம்,13-09-2021, ஆவணி 28, திங்கட்கிழமை, சப்தமி திதி பகல் 03.11 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. அனுஷம் நட்சத்திரம் காலை 08.23 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஜேஷ்டா விரதம். கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷ ராசி நேயர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் பயணத்தில் போது பாதுகாப்பைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும்.
ரிஷப ராசி அன்பர்களே:உடன்பிறந்தவர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். விரும்பியபொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சி தரும்.தொழிலில் இருந்த எதிரிகளின் தொல்லை குறைந்து முன்னேற்றம் ஏற்படும். தாயின் உடல் ஆரோக்கி யம் மேம்படும்.மனைவி வழியில் அனுகூலம் உண்டு.
மிதுன ராசி காரர்களே:எடுத்த காரியத் தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உடன் பிறப்புகள் உதவியாக இருப்பார்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பழைய உறவினர் நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.தொழிலில் இருந்த எதிரிகளின் தொல்லை குறைந்து முன்னேற்றம் ஏற்படும். விஐபிகள் அறிமுகமாவார்கள்.
கடக ராசி நேயர்களே:வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.வேலையில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். தெய்வப் பணிகளில் ஈடு படும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும்.நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
சிம்ம ராசி அன்பர்களே:நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். சிலருக்கு தெய்வப் பணிகளில் ஈடு படும் வாய்ப்பு ஏற்படக்கூடும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக் கூடும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.
கன்னி ராசி காரர்களே:வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டு அறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிற்பகலுக்கு மேல் உடல்நலனில் கவனம் தேவை. அசையா சொத்து வழியில் செலவுகள் ஏற்படும்.தாயின் தேவைக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனை சற்றுக் குறைவாகவே இருக்கும்.வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள்.
துலாராசி உறவுகளே:பழைய பிரச்சினைகள் தீரும்.தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதற்கு வாய்ப்பு ஏற் படும். உத்தியோகத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். அரசாங்க அதிகாரிகளிடம் பேசும்போது பொறு மையைக் கடைப்பிடிக்கவும்.சிந்தித்து செயல்பட்டால் தொழில் விருத்திக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை அளிக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே:சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள்.சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும்.உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.இனிய செய்திகள் வந்து இல்லத்தை மகிழ்விக்கும்.
தனுசு ராசி அன்பர்களே: பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் காணப்படுவீர்கள்.வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். தாய் வழி உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும்.பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறு பாடு நீங்கும்.விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள்.
மகர ராசி காரர்களே:புதிய கோணத்தில் யோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அரசாங்கக் காரியங்கள் முடிவதில் இருந்து வந்த இழுபறி நிலை மாறி, அனுகூலமாக முடியும்.திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும்.எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணையின் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.
கும்ப ராசி உறவுகளே: உங்களிடமிருந்து விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.அலுவலகத்தில் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள்.அரசாங்கக் காரியங்கள் இழுபறி யாகும்.பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
மீன ராசி நேயர்களே:
பாதியில் நின்ற வேலைகள் முடியும். சிலருக்கு சகோதரர்களால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. நவீன டிசைனில் புதிய ஆடைகளை வாங்கும் யோகம் சிலருக்கு ஏற்படும்.கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.