இன்றைய ராசி பலன் – 28.12.2021
இன்றைய பஞ்சாங்கம், 28-12-2021, மார்கழி 13, செவ்வாய்க்கிழமை, நவமி திதி மாலை 06.10 வரை பின்பு தேய்பிறை தசமி. சித்திரை நட்சத்திரம் பின்இரவு 04.11 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷ ராசி நேயர்களே:தந்தையின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.குடும்பத்தினருடன் வெளியிடங்க ளுக்குச் சென்று வருவீர்கள்.பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.
ரிஷப ராசி அன்பர்களே:நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.சிலருக்குக் குடும்பத்துடன் குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பம் அல்லது வேலை தொடர் பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.
மிதுன ராசி காரர்களே:சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
கடக ராசி நேயர்களே:உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் அனுகூலப்பலன் கிடைக்கும்., உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வாழ்க்கைத்துணை யால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
சிம்ம ராசி அன்பர்களே:உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக் கூடும்.கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். குடும்பத்துடன் தெய்வப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும்.
கன்னி ராசி காரர்களே:பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை அரவணைத்துச் செல்வது அவசியம்.சாதாரணமாகப் பேசுவதைக்கூட சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். அவர்கள் கேட்டதை வாங்கித் தர முயற்சி செய்யவும். குடும்பத்தில் பெற்றோர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.உறவினர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள்.
துலாராசி உறவுகளே:மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமை அவசியம். பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும்.எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும்.குடும்பத்தினருடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.பொருளாதார ரீதியாக சில நெருக்கடிகள் ஏற்படலாம்.
விருச்சிக ராசி நேயர்களே:குடும்பத்தில் உங்கள் எண்ணத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும்.பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்படும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.
தனுசு ராசி அன்பர்களே:பிரபலங்கள் உதவுவார்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள் வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.ள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள்.
மகர ராசி காரர்களே:எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.பிள்ளைகளின் அவசியத் தேவைகளுக் காக செலவு செய்யவேண்டி வரும்.உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். சிலருக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும்.பெற்றோரின் அன்பை பெறுவீர்கள்.
கும்ப ராசி உறவுகளே:சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். மனைவிவழி உறவினர்கள் முக்கியத்துவம் தருவார்கள். தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள்.ஆனால், உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும்.
மீன ராசி நேயர்களே:
ராசிக்கு மாலை 04.44 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும்.குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. திடீர் செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும்.