ஆசை ஆசையாக குழந்தை பெற்றுக்கொள்ள காத்திருந்த பெண்ணுக்கு போதைக்கு அடிமையான பெண்ணால் நடந்த கொடுமை.! காதல் மிகுதியால் கணவர் செய்த செயல்.!!
பல வருட காத்திருப்பின் பின் கர்ப்பாமாக இருந்த மனைவியை இழந்த கணவரின் செயல் கண்ணீரை வர வைத்துள்ளது. கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த தம்பதி தான் James Alvarez மற்றும் Yesenia. காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லை, இதனால் மனமுடைந்து போய் இருந்தனர். பின்னர் நண்பர் ஒருவரின் உதவியுடன் பிரபல மருத்துவமனைக்கு சென்ற நிலையில் சரியான சிகிச்சையின் மூலம் Yesenia கர்ப்பமானார்.
இதனால் கணவன் மனைவி மட்டும் இன்றி குடும்பமே மகிழ்ச்சியில் இருந்தது. Yesenia 8 மாத கர்ப்பமாக இருந்த போது கணவருடன் நடை பயிற்சியை மேற்கொண்டுள்ளார். வீதி ஓரத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் ஒன்று வந்து Yesenia மீது மோதியது, அதிர்ந்து போன அவரது கணவர் உடனடியாக வைத்தியசாலை எடுத்துச் சென்ற போது அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்ததுடன் Yeseniaவுக்கு சிகிச்சை செய்தனர்.
ஆனால் சிகிச்சை பலன்றி Yesenia இறந்து போனார். இதனை தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய பெண் கைது செய்யப் பட்டார். போதை பொருளுக்கு அடிமையான குறித்த பெண் ஏற்கனவே இது போல் 2 விபத்துகளை செய்தது தெரிய வந்தது.அதனை தொடர்ந்து குறித்த பெண்ணின் லைசன்ஸ் கேன்சல் செய்யப் பட்டதுடன் சிறை தண்டனையும் விதிக்கப் பட்டது. மற்றவர்களுக்கு இது சாதாரண வழக்காக இருந்தாலும் ஆசை ஆசையாய் குழந்தை மனைவி என வாழலாம் என ஆசைப் பட்ட கணவர் James Alvarezக்கு இது மிகப் பெரிய இழப்பானது.
மனைவி இறந்த நாளில் குழந்தையின் பிறந்த நாள். மனைவியை பிரிந்து ஒருவருடம் ஆன நிலையில் குழந்தைக்கும் ஒரு வருட பிறந்த நாள். இதனால் மனைவி மரணமடைவதற்கு முன்பு எங்கு சென்றார்களோ, போட்டோ எடுத்தார்களோ அங்கெல்லாம் சென்று மனைவியின் புகைப்படத்தின் முன் மகளுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.!!